Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
Latest News:

Ads Place

மார்த்தாண்டம் அருகே டேங்கர் லாரி மோதி பெண் போலீஸ் பரிதாப சாவு

நித்திரவிளையை அடுத்த கிராத்தூர் பகுதியை சேர்ந்தவர் கிறிஸ்டல் பாய் (வயது 46), இவர் கருங்கல் போலீஸ் நிலையத்தில் போலீசாக பணியாற்றி வந்தார். இன...

நித்திரவிளையை அடுத்த கிராத்தூர் பகுதியை சேர்ந்தவர் கிறிஸ்டல் பாய் (வயது 46), இவர் கருங்கல் போலீஸ் நிலையத்தில் போலீசாக பணியாற்றி வந்தார். இன்று (11-04-2021) காலை கிறிஸ்டல் பாய் அவரது மொபட்டில் மார்த்தாண்டம் நோக்கி வந்து கொண்டிருந்தார்.
அப்போது அவருக்கு பின்னால் ஒரு டேங்கர் லாரி வந்தது. கண்ணி மைக்கும் நேரத்தில் லாரி, மொபட் மீது மோதியது. இதில் கிறிஸ்டல் பாய் தூக்கி வீசப்பட்டார். உட லில் காயம் பட்ட அவர் அந்த இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். சிறிது நேரத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.
இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் மார்த்தாண்டம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ் பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் பலியான கிறிஸ்டல் பாயின் கணவர் ஒய்வு பெற்ற ராணுவ வீரர் ஆவார்.
இவருக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். கிறிஸ்டல் பாய் இறந்த தகவல் அறிந்ததும், அவரது உறவினர்களும், போலீசாரும் ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்றனர். அவர்கள் கிறிஸ்டல் பாய் உடலை பார்த்து கதறி அழுதனர்.
இதற்கிடையே டேங்கர் லாரியை ஓட்டி வந்த டிரைவர் அடைக்காக் குழியை சேர்ந்த பாபு (49) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்

மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பிப...

மூணாறு விபத்தில் உயிரிழந்த மாணவ-மாணவிகளின் பெற்றோருக்கு நிதி...

மண்டைக்காடு பகவதியம்மன் திருக்கோவில் மாசிக்கொடை விழா மார்ச் ...

மணவாளக்குறிச்சி, பெரியவிளை பகுதியில் 2 வள்ளங்களில் மோட்டார் ...

புதிய கூட்டணியின் பெயர் ‘இந்தியா’ - சேர்ந்து போராடுவோம்: எதி...

மாதவலாயத்தில் கடை திறப்பு விழா பணியின் போது மின்சாரம் பாய்ந்...

மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியப்பட்டணம் பகுதியை சேர்ந்த வால...

மணவாளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் போலீஸ...

மணவாளக்குறிச்சி பகுதியில் மின்சாரம் தாக்கி 10-ம் வகுப்பு மாண...

மணவாளக்குறிச்சி பேரூர் திமுக செயலாளராக ஐயப்பன் என்ற கண்ணன் ந...