Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
Latest News:

Ads Place

புதுக்கடை அருகே விபத்தில் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் பலி

புதுக்கடையை அடுத்த மேலமங்கலம், விளாத்தி-விளையை சேர்ந்தவர் சுவாமிதாஸ் (வயது 60). சுவாமி தாஸ் வெள்ளயம்பலம் பகுதியில் புதிய கடை கட்டி வருகிறார்...

புதுக்கடையை அடுத்த மேலமங்கலம், விளாத்தி-விளையை சேர்ந்தவர் சுவாமிதாஸ் (வயது 60). சுவாமி தாஸ் வெள்ளயம்பலம் பகுதியில் புதிய கடை கட்டி வருகிறார். அதன் கட்டுமான பணியை பார்க்க நேற்று மாலை அங்கு சென்றார்.
இதற்காக அவர் அந்த பகுதியில் சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியது.
மோட்டார் சைக்கிளை அம்சியை சேர்ந்த சுபின் என்பவர் ஓட்டி வந்தார். மோட்டார் சைக்கிளின் பின்புறம் அதே பகுதியை சேர்ந்த எட்வட் ஜிஜோ என்பவர் அமர்ந்திருந்தார்.

மோட்டார் சைக்கிள் மோதியதில் சுவாமி தாஸ் மற்றும் மோட்டார் சைக் கிளை ஓட்டி வந்த சுபின், அவரது நண்பர் எட்வட் ஜிஜோ ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரி யில் சேர்த்தனர்.
இதில் எட்வட் ஜிஜோ உடல் நிலை மோசமானதால் அவர் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இன்றி இன்று காலை எட்வட் ஜிஜோ பரிதாபமாக இறந்தார். பலியான எட்வட் ஜிஜோ நாகர்கோவில் கோணத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தார். அவர் இறந்த தகவல் அறிந்து உறவி னர்கள் கதறி அழுதனர்.

இந்த சம்பவம் குறித்து புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்

மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பிப...

மூணாறு விபத்தில் உயிரிழந்த மாணவ-மாணவிகளின் பெற்றோருக்கு நிதி...

மண்டைக்காடு பகவதியம்மன் திருக்கோவில் மாசிக்கொடை விழா மார்ச் ...

மணவாளக்குறிச்சி, பெரியவிளை பகுதியில் 2 வள்ளங்களில் மோட்டார் ...

புதிய கூட்டணியின் பெயர் ‘இந்தியா’ - சேர்ந்து போராடுவோம்: எதி...

மாதவலாயத்தில் கடை திறப்பு விழா பணியின் போது மின்சாரம் பாய்ந்...

மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியப்பட்டணம் பகுதியை சேர்ந்த வால...

மணவாளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் போலீஸ...

மணவாளக்குறிச்சி பகுதியில் மின்சாரம் தாக்கி 10-ம் வகுப்பு மாண...

மணவாளக்குறிச்சி பேரூர் திமுக செயலாளராக ஐயப்பன் என்ற கண்ணன் ந...