இறச்சகுளம் பகுதியில் லோடு ஆட்டோ மீது டாரஸ் லாரி மோதிய விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். குமரி மாவட்டம், பூதப்பாண்டியை அடுத்த ஈசாத்திம...
இறச்சகுளம் பகுதியில் லோடு ஆட்டோ மீது டாரஸ் லாரி மோதிய விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

குமரி மாவட்டம், பூதப்பாண்டியை அடுத்த ஈசாத்திமங்கலம் பகுதியை சேர்ந்தவர் குமரன் (வயது 45). இவர் சொந்தமாக லோடு ஆட்டோ வைத்து ஒட்டி வருகிறார். நேற்று மதியம் குமரன் லோடு ஆட்டோவில் டைல்ஸ் ஏற்றி கொண்டு நாவல்காட்டில் இருந்து நாகர்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
இறச்சகுளம் பெரியகுளம் அருகே வந்தபோது, எதிரே வந்த டாரஸ் லாரி லோடு ஆட்டோ மீது மோதியது. இதில் டிரைவர் குமரன், டைல்ஸ் நிறுவன ஊழியரான துவரங்காடு அடுத்த புளியங்குளத்தை சேர்ந்த சுபாஷ் (வயது 28), வடமாநிலத்தை தொழிலாளி ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
படுகாயம் அடைந்த சுபாஷை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுபாஷ் பரிதாபமாக இறந்தார்.
குமரன் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி குமரன் இறந்தார்.
இதுகுறித்து பூதப்பாண்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
No comments