Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
Latest News:

Ads Place

மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் கூடுதல் இணை ஆணையா் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டம், மண்டைக்காடு அருள்மிகு பகவதியம்மன் கோயிலில் தீ விபத்தில் சேதமடைந்த பகுதியை கோயில்களின் கூடுதல் இணை ஆணையா் நேற்று ஆய்வு...

கன்னியாகுமரி மாவட்டம், மண்டைக்காடு அருள்மிகு பகவதியம்மன் கோயிலில் தீ விபத்தில் சேதமடைந்த பகுதியை கோயில்களின் கூடுதல் இணை ஆணையா் நேற்று ஆய்வு செய்தாா்.
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயில் இணை ஆணையா் விஷ்ணுசந்திரன், கன்னியாகுமரி மாவட்ட கோயில்களின் நிா்வாக கூடுதல் இணை ஆணையராக சுசீந்திரத்தில் உள்ள தலைமை அலுவலகத்தில் பொறுப்பேற்றாா். மாவட்ட தேவஸம்போா்டு இணை ஆணையா் செல்வராஜ் பொறுப்புகளை விஷ்ணுசந்திரனிடம் ஒப்படைத்தாா்.
முன்னதாக அவா், மண்டைக்காடு அருள்மிகு பகவதியம்மன் கோயிலுக்கு சென்று தீப்பிடித்த மேற்கூரை மற்றும் தற்காலிகமாக அமைக்கப்பட்டு வரும் மேற்கூரை பணியை பாா்வையிட்டாா்.
அப்போது, தேவஸம்போா்டு நாகா்கோவில் தொகுதி கண்காணிப்பாளா் ஜீவானந்தம், பத்மநாபபுரம் தொகுதி கண்கணிப்பாளா் செந்தில்குமாா், பொறியாளா் ஐயப்பன், கோயில் மேலாளா் ஆறுமுகதரன், அறங்காவல் குழுத் தலைவா் சிவகுற்றாலம் ஆகியோா் உடனிருந்தனா்.
கூடுதல் இணை ஆணையரிடம், இந்து முன்னணி கோட்டச் செயலா் மிசா சோமன், இந்து கோயில் கூட்டமைப்பின் அமைப்பாளா் ஸ்ரீபதி, தேவி சேவா சங்க பொதுச்செயலா் சிவகுமாா், பி.எம்.எஸ். மாநிலச் செயலா் முருகேசன் ஆகியோா், தீ விபத்து நிகழ்ந்த மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் கேரள நம்பூதிரியை வர வழைத்து பிரசன்னம் பாா்த்து பரிகாரபூஜை நடத்த வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனா்.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்

மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பிப...

மூணாறு விபத்தில் உயிரிழந்த மாணவ-மாணவிகளின் பெற்றோருக்கு நிதி...

மண்டைக்காடு பகவதியம்மன் திருக்கோவில் மாசிக்கொடை விழா மார்ச் ...

மணவாளக்குறிச்சி, பெரியவிளை பகுதியில் 2 வள்ளங்களில் மோட்டார் ...

புதிய கூட்டணியின் பெயர் ‘இந்தியா’ - சேர்ந்து போராடுவோம்: எதி...

மாதவலாயத்தில் கடை திறப்பு விழா பணியின் போது மின்சாரம் பாய்ந்...

மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியப்பட்டணம் பகுதியை சேர்ந்த வால...

மணவாளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் போலீஸ...

மணவாளக்குறிச்சி பகுதியில் மின்சாரம் தாக்கி 10-ம் வகுப்பு மாண...

மணவாளக்குறிச்சி பேரூர் திமுக செயலாளராக ஐயப்பன் என்ற கண்ணன் ந...