Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
Latest News:
latest

Ads Place

கொலையில் முடிந்த பெண் அதிகாரியின் காதல் !

சென்னையில் கடந்த 7 வருடமாக காதலித்த பெண் ஒருவர் திருமணம் செய்ய மறுத்ததால், அவரையும், அவரது அம்மாவையும் இளைஞர் ஒருவர் தீ வைத்து எரித்து கொலை ...

சென்னையில் கடந்த 7 வருடமாக காதலித்த பெண் ஒருவர் திருமணம் செய்ய மறுத்ததால், அவரையும், அவரது அம்மாவையும் இளைஞர் ஒருவர் தீ வைத்து எரித்து கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கொருக்குப்பேட்டை அனந்தநாயகி நகர் பகுதியை சேர்ந்த வெங்கட்டம்மாவுக்கு, 26 வயதில் ரஜிதா என்ற மகள் உள்ளார். மாநகராட்சி ஊழியரான அவரது கணவர் இறந்ததால் அவருடைய பணி கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு மகள் ரஜிதாவிற்கு வழங்கப்பட்டது. இதனால், இவர்கள் இருவரும் தனியாக வசித்து வருகின்றனர்.
தண்டையார்பேட்டை மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக ரஜிதா பணியாற்றி வந்துள்ளார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த சதீஷ் என்ற இளைஞருடன் கடந்த 7 வருடங்களாக காதலித்து வந்துள்ளார். அப்போது அவர் ரஜிதாவை கோவிலில் வைத்து திருமணம் செய்துள்ளதாகுவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், தண்டையார்பேட்டை மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் உடன் பணிபுரியும் மயிலாப்பூரைச் சேர்ந்த ஒருவருடன் காதல் வயப்பட்டு, திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டு, இவர்கள் இருவருக்கும் கடந்த ஜனவரி மாதம் 17ஆம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில், தனது காதலை ஏற்றுக்கொள்ளும்படி ரஜிதாவை சதீஷ் வற்புறுத்தியுள்ளார். இதை அவர் ஏற்க மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த சதீஷ் மண்ணெண்ணெய் கேனுடன் ரஜிதாவின் வீட்டிற்கு சென்று ஓட்டை பிரித்து உள்ளே குதித்து தீ வைத்துள்ளார். மேலும், தன் மீதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

ரஜிதாவின் வீட்டில் இருந்து புகையும், வாடையும் வெளியே வருவதை கண்ட அக்கம் பக்கத்தினர் இது தொடர்பாக போலிசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆர்.கே.நகர் போலிசார், தீயில் கருகிய மூன்று பேர் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இது தொடர்பாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், தண்டையார்பேட்டை மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் ரஜிதா பணிபுரிந்த போது, உடன் பணியாற்றிய சதீஷை காதலித்து வந்துள்ளார். கடந்த 7 வருடமாக காதலித்து விட்டு கடைசியில் ஒரு வருடத்தில் உடன் பணியாற்றும் மாநகராட்சி பணியாளருடன் திருமணம் செய்ய முயன்றதால் தீ வைத்து எரித்து கொலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்