Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
Latest News:

Ads Place

சுங்கான்கடை அருகே ஆட்டோ ஷோரூமிற்குள் லாரி புகுந்தது: 2 பேர் படுகாயம் 7 ஆட்டோக்கள் சேதம்

மதுரையில் இருந்து வெங்காயம் ஏற்றிக்கொண்டு திருவனந்தபுரம் நோக்கி ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை உசிலம்பட்டியை சேர்ந்த கணேசன் (வயத...

மதுரையில் இருந்து வெங்காயம் ஏற்றிக்கொண்டு திருவனந்தபுரம் நோக்கி ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை உசிலம்பட்டியை சேர்ந்த கணேசன் (வயது 27) ஓட்டி வந்தார். அவருடன் அதே ஊரை சேர்ந்த முத்துராமன் (30) என்பவர் இருந்தார்.
இந்நிலையில் லாரி குமரி மாவட்டம் சுங்கான்கடை அருகே களியங்காடு என்ற இடத்தில் சென்ற போது, முன்னால் சென்ற வாகனத்தை லாரி முந்த முயன்றதாக தெரிகிறது. 
அப்போது எதிர்பாராதவிதமாக லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி, சாலையோர ஆட்டோ ஷோரூமிற்குள் புகுந்து கவிழ்ந்தது. 
இந்த விபத்தில் ஷோரூமில் நிறுத்தியிருந்த 7 ஆட்டோக்கள் சேதமடைந்தன. மேலும் லாரியில் இருந்த கணேசன், முத்துராமன் ஆகிய 2 பேரும் படுகாயமடைந்தனர். மேலும் இதுதொடர்பாக இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
ஷோரூம் முன்பு ஊழியர்கள் வழக்கமாக நின்று கொண்டிருப்பார்களாம். அதிர்ஷ்டவசமாக விபத்து நேரிட்ட போது அங்கு அவர்கள் நிற்கவில்லை. இதனால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இந்த விபத்து அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்

மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பிப...

மூணாறு விபத்தில் உயிரிழந்த மாணவ-மாணவிகளின் பெற்றோருக்கு நிதி...

மண்டைக்காடு பகவதியம்மன் திருக்கோவில் மாசிக்கொடை விழா மார்ச் ...

மணவாளக்குறிச்சி, பெரியவிளை பகுதியில் 2 வள்ளங்களில் மோட்டார் ...

புதிய கூட்டணியின் பெயர் ‘இந்தியா’ - சேர்ந்து போராடுவோம்: எதி...

மாதவலாயத்தில் கடை திறப்பு விழா பணியின் போது மின்சாரம் பாய்ந்...

மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியப்பட்டணம் பகுதியை சேர்ந்த வால...

மணவாளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் போலீஸ...

மணவாளக்குறிச்சி பகுதியில் மின்சாரம் தாக்கி 10-ம் வகுப்பு மாண...

மணவாளக்குறிச்சி பேரூர் திமுக செயலாளராக ஐயப்பன் என்ற கண்ணன் ந...