Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
Latest News:

Ads Place

நாகர்கோவில் அருகே தீராத கடன் தொல்லை இளம் தம்பதிகள் தற்கொலை

நாகர்கோவில் அருகே காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதியினர் கடன் தொல்லையால் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டனர். இது குறித்து போலீஸ் தரப்பில் க...

நாகர்கோவில் அருகே காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதியினர் கடன் தொல்லையால் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- 

தூத்துக்குடி சிதம்பரபுரத்தைச் சேர்ந்தவர் மகா வைகுண்டம் (வயது 24). இவரும் நெல்லையைச் சேர்ந்த கஸ்தூரி என்ற கரிசுல்தாள் என்பவரும் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு இருவரது பெற்றோர்களும் எதிர்பு தெரிவிக்கவே திருமணத்திற்குப் பிறகு குமரி மாவட்டம் சாமிதோப்பிற்கு குடிவந்தனர். 
சி,சி.டி.வி கேமரா பொருத்தும் பணிசெய்து வந்த மகா வைகுண்டம் குமரி மாவட்டம் வந்தும் அதே பணியை தொடர்ந்து செய்து வந்தார். சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு கோட்டார் பறக்கை ரோடு ஜங்சன் அருகே பைத்துல்மால் நகரில் ஒரு வீட்டில் குடி வந்தனர்.
நேற்று காலை கரிசுல்தாளை தேடிவந்த மகளீர் சுய உதவிக்குழுவைச் சேர்ந்த பெண்கள் வீடு திறக்காததால் கதவை தள்ளியபோது கதவு தானாக திறந்துள்ளது. அவர்கள் வீட்டினுள் சென்றபோது அங்கு கணவன் மனைவி இருவரும் வாயில் நுரை தள்ளியபடி இறந்து கிடந்தனர். 
இதனைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண்கள் உடனே கோட்டார் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். போலீசார் சம்பவ இடம் சென்று இருவரது உடலையும் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
மேலும் இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். விசாரணையில் மகாவைகுண்டம் பலரிடம் கடன் வாங்கி திருப்பி கொடுக்கமுடியாமல் அவதிப்பட்டு வந்ததாகவும், மேலும் இவர்களுக்கு திருமணமாகி நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியும் குழந்தை இல்லாததால் அந்த கவலையில் இருந்ததாகவும் தெரிகிறது.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்

மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பிப...

மூணாறு விபத்தில் உயிரிழந்த மாணவ-மாணவிகளின் பெற்றோருக்கு நிதி...

மண்டைக்காடு பகவதியம்மன் திருக்கோவில் மாசிக்கொடை விழா மார்ச் ...

மணவாளக்குறிச்சி, பெரியவிளை பகுதியில் 2 வள்ளங்களில் மோட்டார் ...

புதிய கூட்டணியின் பெயர் ‘இந்தியா’ - சேர்ந்து போராடுவோம்: எதி...

மாதவலாயத்தில் கடை திறப்பு விழா பணியின் போது மின்சாரம் பாய்ந்...

மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியப்பட்டணம் பகுதியை சேர்ந்த வால...

மணவாளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் போலீஸ...

மணவாளக்குறிச்சி பகுதியில் மின்சாரம் தாக்கி 10-ம் வகுப்பு மாண...

மணவாளக்குறிச்சி பேரூர் திமுக செயலாளராக ஐயப்பன் என்ற கண்ணன் ந...