Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
Latest News:
latest

Ads Place

குழித்துறை மேற்கு ரயில் நிலையத்தில் ரயில் மோதி மேஸ்திரி பலி

குமரி மாவட்டம் குழித்துறை மேற்கு ரயில் நிலையத்தில் ரயில் மோதி ஒருவர் பலியானார். ரயில் நிலைய தண்டவாளத்திலேயே பிணம் கிடந்ததால் சிறப்பு ரயில் ஒ...

குமரி மாவட்டம் குழித்துறை மேற்கு ரயில் நிலையத்தில் ரயில் மோதி ஒருவர் பலியானார். ரயில் நிலைய தண்டவாளத்திலேயே பிணம் கிடந்ததால் சிறப்பு ரயில் ஒரு மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது.
குழித்துறை மேற்கு ரயில் நிலையத்தில் ரயில் மோதி குழித்துறை அருகே பாகோடு, கோவில்வட்டம் பகுதியை சேர்ந்த சசி (44) என்பவர் உயிர் இழந்து ரயில் நிலைய தண்டவாளத்தில் கிடந்துள்ளார். 
இந்த நிலையில் இந்த பிணத்தை அப்புறப்படுத்த நாகர்கோவிலில் இருந்து ரயில்வே போலீசார் வருவதில் காலதாமதம் ஏற்பட்டது. இதனால் திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு ரயில்வே பணியாளர்களை ஏற்றி வரும் சிறப்பு ரயில் குழித்துறை மேற்கு ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. 
இந்த நிலையில் நாகர்கோவிலில் இருந்து ரயில்வே போலீசார் வந்து பிணத்தை மாற்றிய பிறகு ஒரு மணி நேரத்துக்கு பின் தாமதமாக பணியாளர்களை ஏற்றிவந்த இந்த சிறப்பு ரயில் சென்றது. 
இந்நிலையில் கட்டிட மேஸ்திரியாக வேலை செய்துவந்த சசியின் உடலை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து ரயில்வே போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்