சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஐப்பசி மாத பூஜையை யொட்டி சாமி தரிசனத்திற்கு பந்தர்களுக்கு அனுமதி அளிக்க மந்திரி சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற...
சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஐப்பசி மாத பூஜையை யொட்டி சாமி தரிசனத்திற்கு பந்தர்களுக்கு அனுமதி அளிக்க மந்திரி சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

ஐப்பசி மாத பூஜைககாக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை வருகிற 16 – ம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. 17-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை 5 நாட்கள் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
இந்த நிலையில் முதல் மந்திரி பினராயி விஜயன் தலைமையில் திருவனந்தபுரத்தில் நடந்த மந்திரி சபை கூட்டத்தில், ஐப்பசி மாத பூஜையையொட்டி சாமி தரிசனத்திற்கு பக்தர்களை அனுமதிக்க முடிவெடுக்கப்பட்டு உள்ளது.
கொரோனா கட்டுப்பாட்டு தடை விதிகளை பின்பற்றி தினசரி 250 பக்தர்கள் வரை தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் - ஆன்லைன் மூலம் முன்பதிவு வரும் அய்யப்ப பக்தர்களுக்கு கொரோனா இல்லை என்ற சான்றிதழ் கட்டாயப்படுத்தப்பட்டு உள்ளது.
அதே நேரத்தில் மற்ற கோவில்களிலும் பக்தர்கள் தரிசனத்திற்கு கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்க மந்திரி சபை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டு உள்ளது.
















No comments