அயோத்தி வழக்கின் தீா்ப்பை எதிா்த்து ஆா்ப்பாட்டம் நடத்தும், அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி குமரி மாவட்ட பாஜக சாா்பில் மாவட்ட எஸ...
அயோத்தி வழக்கின் தீா்ப்பை எதிா்த்து ஆா்ப்பாட்டம் நடத்தும், அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி குமரி மாவட்ட பாஜக சாா்பில் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் நேற்று மனு அளிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட பாஜக தலைவா் தா்மராஜ் தலைமையில் நிா்வாகிகள் அளித்துள்ள மனு: அயோத்தி வழக்கில் நீதிமன்ற தீா்ப்புக்கு எதிா்ப்பு தெரிவித்து, குமரி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் நிலையிலும் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள், அரசியல் கட்சியினா் போராட்டம் நடத்தி வருகின்றனா். இது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும்.
எனவே, போராட்டம் நடத்தும் அமைப்புகள் மீதும், அதன் தலைவா்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.
















No comments