Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
Latest News:

Ads Place

“உகாண்டா தமிழன் கிரிக்கெட் கிளப்” சார்பில் மாபெரும் கிரிக்கெட் போட்டிகள் நவம்பர் 3-ம் தேதி நடக்கிறது

“ஆப்பிரிக்காவின் வைரம்” என்று அழைக்கப்படும் அழகிய நாடு உகாண்டா. இந்த நாட்டில் ஏராளமான கண்கவர் இயற்கை காட்சிகளும், வனவிலங்கு பூங்காக்களும்,...

“ஆப்பிரிக்காவின் வைரம்” என்று அழைக்கப்படும் அழகிய நாடு உகாண்டா. இந்த நாட்டில் ஏராளமான கண்கவர் இயற்கை காட்சிகளும், வனவிலங்கு பூங்காக்களும், ஆர்ப்பரிக்கும் நைல் நதியின் கொள்ளை கொள்ளும் அழகும், மாயாஜாலம் காட்டும் நீர்வீழ்ச்சிகளும் கொண்ட இயற்கை வளம் கொழிக்கும் நாடு.
இந்த நாட்டில் இந்தியர்கள் அதிக அளவில் உள்ளனர். பலர் குடியுரிமை பெற்றும் உள்ளனர். தமிழர்களும் அதிகளவில் வாழ்கின்றனர்.
இங்கு உகாண்டா தமிழ் சங்கம் தோற்றுவிக்கப்பட்டு, அதன் மூலம் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருவதுடன், தமிழ் கலாச்சார நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகிறது.
உகாண்டாவில் இந்தியர்கள் கலந்து கொள்ளும் கிரிக்கெட் போட்டிகள் அவ்வப்போது நடைபெறுவது உண்டு. 2 மாதங்களுக்கு முன்னர் தமிழர்கள் சார்பில் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டன.
உகாண்டா வாழ் தமிழரான, வெங்கட கிருஷ்ணன் என்பவரால் “உகாண்டா தமிழன் கிரிக்கெட் கிளப்” என்ற விளையாட்டு கிளப் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் உரிமையாளரான வெங்கட கிருஷ்ணன், உகாண்டாவில் உள்ள பிரபல நிறுவனமான Katon Manufacturers Limited – ன் மேனேஜிங் டைரக்டர் ஆவார்.
Uganda Tamilan Cricket Club" Owner with Family

இந்த கிளப் மூலம் முதல்முறையாக மாபெரும் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட உள்ளது. வரும் நவம்பர் மாதம் 3-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் துவங்க உள்ளது.

போட்டிகள் அனைத்தும் உகாண்டா தலைநகர் கம்பாலா வில் உள்ள நகாவா, மப்ஸ் கிரிக்கெட் ஓவல் (Mubs Cricket Oval, Nakawa, Kampala) மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது. போட்டிகளை இலவசமாக கண்டு களிக்கலாம்.

போட்டிகள் நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை உகாண்டா தமிழன் கிரிக்கெட் கிளப் உரிமையாளர் மற்றும் கிளப் அங்கத்தினர் செய்து வருகின்றனர்.
New & Photos
Dr. N. Venkata Krishnan
Managing Dierctor
Katon Manufacturer Limited
Kampala, Uganda

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்

மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பிப...

மூணாறு விபத்தில் உயிரிழந்த மாணவ-மாணவிகளின் பெற்றோருக்கு நிதி...

மண்டைக்காடு பகவதியம்மன் திருக்கோவில் மாசிக்கொடை விழா மார்ச் ...

மணவாளக்குறிச்சி, பெரியவிளை பகுதியில் 2 வள்ளங்களில் மோட்டார் ...

புதிய கூட்டணியின் பெயர் ‘இந்தியா’ - சேர்ந்து போராடுவோம்: எதி...

மாதவலாயத்தில் கடை திறப்பு விழா பணியின் போது மின்சாரம் பாய்ந்...

மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியப்பட்டணம் பகுதியை சேர்ந்த வால...

மணவாளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் போலீஸ...

மணவாளக்குறிச்சி பகுதியில் மின்சாரம் தாக்கி 10-ம் வகுப்பு மாண...

மணவாளக்குறிச்சி பேரூர் திமுக செயலாளராக ஐயப்பன் என்ற கண்ணன் ந...