Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
Latest News:

Ads Place

சீட்டு கட்டிய கடனை அடைக்க நகை, பணம் கொள்ளை போனதாக நாடகமாடிய பெண்

சீட்டு கட்டிய கடனை அடைக்க நகை, பணம் கொள்ளை போனதாக நாடகமாடிய பெண் 12-01-2013 சென்னை கொசப்பேட்டை கந்தசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் சுந...

சீட்டு கட்டிய கடனை அடைக்க நகை, பணம் கொள்ளை போனதாக நாடகமாடிய பெண்
12-01-2013
சென்னை கொசப்பேட்டை கந்தசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் சுந்தரி (வயது 62). இவர் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து புகார் செய்தார். புகாரில், கடந்த 10-ந்தேதிதான் வீட்டில் தனியாக இருந்தபோது வீட்டுக்குள் புகுந்த 3 மர்ம ஆசாமிகள் கத்தியை காட்டி மிரட்டி வீட்டில் இருந்த 9 பவுன் நகை, ரூ. 87 ஆயிரம் ரொக்கப் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுவிட்டதாக கூறி இருந்தார்.

இதுகுறித்து ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். புளியந்தோப்பு உதவி கமிஷனர் லோகநாதன் மற்றும் ஓட்டேரி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். ஆனால் கொள்ளை நடந்ததற்கான எந்த அடையாளமும் காணப்படவில்லை. இதையடுத்து சுந்தரியிடம் போலீசார் துருவி துருவி விசாரித்தனர். அப்போது அவர் நகை, பணம் கொள்ளை போனதாக நாடகமாடியது தெரிய வந்தது.

சுந்தரி சீட்டு பணம் கட்டி வந்தார். அதில் கடன் ஏற்பட்டது. இந்த கடனை அடைக்க வீட்டில் இருந்த நகை, பணத்தை மகன், மகளுக்கு தெரியாமல் மறைத்து வைத்துவிட்டு கொள்ளை நாடகம் ஆடியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து நகை, பணத்தை போலீசார் மீட்டனர்.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்

மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பிப...

மூணாறு விபத்தில் உயிரிழந்த மாணவ-மாணவிகளின் பெற்றோருக்கு நிதி...

மண்டைக்காடு பகவதியம்மன் திருக்கோவில் மாசிக்கொடை விழா மார்ச் ...

மணவாளக்குறிச்சி, பெரியவிளை பகுதியில் 2 வள்ளங்களில் மோட்டார் ...

புதிய கூட்டணியின் பெயர் ‘இந்தியா’ - சேர்ந்து போராடுவோம்: எதி...

மாதவலாயத்தில் கடை திறப்பு விழா பணியின் போது மின்சாரம் பாய்ந்...

மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியப்பட்டணம் பகுதியை சேர்ந்த வால...

மணவாளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் போலீஸ...

மணவாளக்குறிச்சி பகுதியில் மின்சாரம் தாக்கி 10-ம் வகுப்பு மாண...

மணவாளக்குறிச்சி பேரூர் திமுக செயலாளராக ஐயப்பன் என்ற கண்ணன் ந...