Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
Latest News:

Ads Place

குமரியில் பிரதமர் மோடி ஏப்ரல் 2-ம் தேதி பிரசாரம்

கன்னியாகுமரியில் பிரதமர் மோடி ஏப்ரல் 2-ம் பிரசாரம் செய்கிறார். இதற்கான கால் கோள் நிகழ்ச்சியில் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார். குமரி மா...

கன்னியாகுமரியில் பிரதமர் மோடி ஏப்ரல் 2-ம் பிரசாரம் செய்கிறார். இதற்கான கால் கோள் நிகழ்ச்சியில் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார்.
குமரி மாவட்டத்தில் அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று பிரசாரம் செய்தார்.
இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி வருகிற 2-ம் தேதி கன்னியாகுமரிக்கு வருகிறார். அவர் அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.

இதற்காக கன்னியாகுமரியை அடுத்த அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லூரி மைதானத்தில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்படுகிறது. இதற்கான கால்கோள் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பா.ஜனதா கட்சி சார்பில் போட்டியிடும் முன்னாள் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு கால்கோள் பணியை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பா.ஜனதா கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரிக்கு வருவதையொட்டி பாதுகாப்பு பணிகள் குறித்து டெல்லியில் இருந்து வந்த பாதுகாப்பு அதிகாரிகள் கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகையில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள்.
பின்னர் அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லூரி மைதானத்துக்கு சென்று பிரதமர் மோடி பேசும் இடத்தை பார்வையிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினார்கள்.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்

மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பிப...

மூணாறு விபத்தில் உயிரிழந்த மாணவ-மாணவிகளின் பெற்றோருக்கு நிதி...

மண்டைக்காடு பகவதியம்மன் திருக்கோவில் மாசிக்கொடை விழா மார்ச் ...

மணவாளக்குறிச்சி, பெரியவிளை பகுதியில் 2 வள்ளங்களில் மோட்டார் ...

புதிய கூட்டணியின் பெயர் ‘இந்தியா’ - சேர்ந்து போராடுவோம்: எதி...

மாதவலாயத்தில் கடை திறப்பு விழா பணியின் போது மின்சாரம் பாய்ந்...

மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியப்பட்டணம் பகுதியை சேர்ந்த வால...

மணவாளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் போலீஸ...

மணவாளக்குறிச்சி பகுதியில் மின்சாரம் தாக்கி 10-ம் வகுப்பு மாண...

மணவாளக்குறிச்சி பேரூர் திமுக செயலாளராக ஐயப்பன் என்ற கண்ணன் ந...