Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
Latest News:

Ads Place

நாகர்கோவில் அமெரிக்க என்ஜினீயர் வீட்டில் வருமான வரித்துறை திடீர் சோதனை: பல லட்சம் பணம் சிக்கியது

நாகர்கோவிலில் அமெரிக்க என்ஜினீயர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது கட்டு, கட்டாக பணம் மற்றும் ஆவணங்கள் சிக்கியத...

நாகர்கோவிலில் அமெரிக்க என்ஜினீயர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது கட்டு, கட்டாக பணம் மற்றும் ஆவணங்கள் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழக சட்டசபை தேர்தல் வருகிற 6-ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி தேர்தலில் வாக்காளர்களுக்கு பணப்பட்டு வாடா செய்வதை தடுக்க தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
அதோடு 24 மணி நேரமும் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனை நடத்தி வருகிறார்கள். மேலும் வருமான வரித்துறையும் வங்கிகளில் அதிக பண பரிமாற்றம் தொடர்பாக ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது. அப்போது சந்தேகம் ஏற்படும் நபர்களின் வீட்டுக்கு அதிரடியாக சென்று அதிகாரிகள் சோதனை நடத்துகிறார்கள்.

இந்த நிலையில் நாகர்கோவில் ஜெகநாதன் தெருவில் வசித்து வரும் பாலசுப்பிரமணியன் என்பவர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று அதிரடியாக நுழைந்து தீவிர சோதனை நடத்தினார்கள். வீட்டின் வெளியே கோட்டார் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். உறவினர்கள் யாரையும் வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை.
இந்த சோதனையானது அதிகாலை 2 மணிக்கு தொடங்கியது. தொடர்ந்து பகல் 12 மணிக்கும் மேலாக சோதனை நடந்தது. சோதனையின் போது வீட்டில் இருந்து கட்டு கட்டாக பணம் மற்றும் நகைகள் சிக்கியது. அதோடு முக்கிய ஆவணங்களும் சிக்கியுள்ளது.

கைப்பற்றப்பட்ட பணம் பல லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் ஆவணங்களை வருமான வரித்துறையினர் காரில் ஏற்றி கொண்டு சென்றனர். பாலசுப்பிரமணியனின் மகன் ராஜே‌‌ஷ் என்ஜினீயர் ஆவார். அமெரிக்காவில் பணியாற்றி வருகிறார்.
இவர் வரி ஏய்ப்பு செய்ததால் சோதனை நடந்ததாக கூறப்படுகிறது. அதே சமயத்தில் தேர்தல் நேரத்தில் வீட்டில் சோதனை நடந்ததால் பணப்பட்டுவாடா செய்வதற்காக பதுக்கி வைக்கப்பட்டதா? என்ற ரீதியில் விசாரணை நடக்கிறது. அமெரிக்க என்ஜினீயர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்

மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பிப...

மூணாறு விபத்தில் உயிரிழந்த மாணவ-மாணவிகளின் பெற்றோருக்கு நிதி...

மண்டைக்காடு பகவதியம்மன் திருக்கோவில் மாசிக்கொடை விழா மார்ச் ...

மணவாளக்குறிச்சி, பெரியவிளை பகுதியில் 2 வள்ளங்களில் மோட்டார் ...

புதிய கூட்டணியின் பெயர் ‘இந்தியா’ - சேர்ந்து போராடுவோம்: எதி...

மாதவலாயத்தில் கடை திறப்பு விழா பணியின் போது மின்சாரம் பாய்ந்...

மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியப்பட்டணம் பகுதியை சேர்ந்த வால...

மணவாளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் போலீஸ...

மணவாளக்குறிச்சி பகுதியில் மின்சாரம் தாக்கி 10-ம் வகுப்பு மாண...

மணவாளக்குறிச்சி பேரூர் திமுக செயலாளராக ஐயப்பன் என்ற கண்ணன் ந...