Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
Latest News:

Ads Place

அருமனை அருகே டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக டிராக்டரில் ஊர்வலம் வந்த மணமக்கள்

மத்திய அரசின் வேளாண் திருத்த சட்டங்களை திரும்பபெற கோரி டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்...

மத்திய அரசின் வேளாண் திருத்த சட்டங்களை திரும்பபெற கோரி டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்ததையடுத்து விவசாயிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) டிராக்டர்களுடன் பேரணியில் ஈடுபடுவதாக தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து குமரி மாவட்டம் அருமனை அருகே மாங்கோடு பஞ்சாயத்துக்கு உட்பட்ட அம்பலக்காலை பகுதியை சேர்ந்த என்ஜினீயர் ஜெரின் டிராக்டரில் சென்று திருமணம் செய்தார். 
இதற்காக பாத்திமாநகரை சேர்ந்த மணமகள் பபி வீட்டுக்கு உறவினர்களுடன் டிராக்டரில் சென்றார். அந்த டிராக்டர் வாழை குலை, பலாபழம், வைக்கோல் போன்ற பொருட்களால் அலங்கரிக்கபட்டு இருந்தது. 
அங்கு திருமணம் முடிந்த பின்பு மணமக்கள் டிராக்டரில் ஊர்வலமாக அம்பலக்காலைக்கு திரும்பினர். இதுகுறித்து மணமகன் ஜெரின் கூறும்போது, டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக விவசாயிகளுக்கு உதவும் டிராக்டரில் சென்று திருமணத்தை நடத்தியதாகவும், விவசாயிகளின் டிராக்டர் பேரணிக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும், கூறினார்.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்

மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பிப...

மூணாறு விபத்தில் உயிரிழந்த மாணவ-மாணவிகளின் பெற்றோருக்கு நிதி...

மண்டைக்காடு பகவதியம்மன் திருக்கோவில் மாசிக்கொடை விழா மார்ச் ...

மணவாளக்குறிச்சி, பெரியவிளை பகுதியில் 2 வள்ளங்களில் மோட்டார் ...

புதிய கூட்டணியின் பெயர் ‘இந்தியா’ - சேர்ந்து போராடுவோம்: எதி...

மாதவலாயத்தில் கடை திறப்பு விழா பணியின் போது மின்சாரம் பாய்ந்...

மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியப்பட்டணம் பகுதியை சேர்ந்த வால...

மணவாளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் போலீஸ...

மணவாளக்குறிச்சி பகுதியில் மின்சாரம் தாக்கி 10-ம் வகுப்பு மாண...

மணவாளக்குறிச்சி பேரூர் திமுக செயலாளராக ஐயப்பன் என்ற கண்ணன் ந...