Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
Latest News:
latest

Ads Place

செண்பகராமன்புதூரில் டிரான்ஸ்பார்மரில் பைக் மோதி தொழிலாளி பலி

அருமநல்லூர் அம்பட்டையான் கோணம் பகுதியை சேர்ந்தவர் ஸ்டீபன்சன் என்ற மணி (வயது 32). கூலி தொழிலாளி. இவரது மனனவி உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை ...

அருமநல்லூர் அம்பட்டையான் கோணம் பகுதியை சேர்ந்தவர் ஸ்டீபன்சன் என்ற மணி (வயது 32). கூலி தொழிலாளி. இவரது மனனவி உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார்.
அவருக்கு தேவையான பச்சிலையை செண்பகராமன்புதூர், மரப்பாலம் அருகே உள்ள செங்கல் சூளையில் வேலை பார்க்கும் தனது தாயிடம் எடுத்து வைக்க கூறிவிட்டு, அதை வாங்குவதற்காக ஜோசப் ஆன்றோ (வயது 35) என்பவரின் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். 
அவ்வையார் அம்மன் கோயில் அருகே வரும்போது, எதிர்பாராத விதமாக சாலையோரம் இருந்த டிரான்ஸ்பார்மரில் பைக் மோதியது. இதில் பைக்கில் இருந்த ஜோசப் ஆன்றோ மற்றும் ஸ்டீபன்சன் ஆகியோர் தூக்கி வீசப்பட்டனர். 
இதுகுறித்து 108 ஆம்புலன்சுக்கும், ஆரல்வாய்மொழி காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த பகுதிக்கு விரைந்து வந்த போலீசார் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்புவதற்கு ஏற்பாடுகளை செய்தனர். 
அப்போது ஸ்டீபன்சன் என்ற மணி பலியானது தெரிய வந்தது. தலையில் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிய ஜோசப் ஆன்றோவை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் விபத்து குறித்து போலீசார் விராசனை நடத்தி வருகின்றனர்.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்