Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
Latest News:

Ads Place

தக்கலை அருகே காதலியை கரம்பிடிக்க முடியாத ஏக்கத்தில் வாலிபர் தற்கொலை

தக்கலை அருகே காதலியை திருமணம் செய்ய முடியாத ஏக்கத்தில் மனம் நொந்த காதலன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார...

தக்கலை அருகே காதலியை திருமணம் செய்ய முடியாத ஏக்கத்தில் மனம் நொந்த காதலன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
தக்கலை அருகே திக்கணங்கோடு பொத்தைக்காட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் பிரவின்தாஸ் (வயது 32). ஏசி மெக்கானிக். தன்னுடன் நட்பாக பழகிய ஒரு பெண்ணை கடந்த 6 வருடங்களாக காதலித்து வந்துள்ளார். 
நாளைடைவில் 2 பேரும் ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்து வந்தனர். இந்த காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரிய வந்தது. அவர்கள் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் காதலர்கள் மனவருத்தத்தில் இருந்து வந்துள்ளனர். 

இந்நிலையில் நேற்று காதலிக்கு திருமணம் நடந்துள்ளது. இதனால் பிரவின்தாஸ் மனமுடைந்து காணப்பட்டார். அதனை தொடர்ந்து நேற்று முன்தினம் அவர் வீட்டின் படுக்கை அறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். 
இதுகுறித்து அறிந்ததும் தக்கலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தக்கலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதலியை கரம்பிடிக்க முடியாத ஏக்கத்தில் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்

மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பிப...

மூணாறு விபத்தில் உயிரிழந்த மாணவ-மாணவிகளின் பெற்றோருக்கு நிதி...

மண்டைக்காடு பகவதியம்மன் திருக்கோவில் மாசிக்கொடை விழா மார்ச் ...

மணவாளக்குறிச்சி, பெரியவிளை பகுதியில் 2 வள்ளங்களில் மோட்டார் ...

புதிய கூட்டணியின் பெயர் ‘இந்தியா’ - சேர்ந்து போராடுவோம்: எதி...

மாதவலாயத்தில் கடை திறப்பு விழா பணியின் போது மின்சாரம் பாய்ந்...

மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியப்பட்டணம் பகுதியை சேர்ந்த வால...

மணவாளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் போலீஸ...

மணவாளக்குறிச்சி பகுதியில் மின்சாரம் தாக்கி 10-ம் வகுப்பு மாண...

மணவாளக்குறிச்சி பேரூர் திமுக செயலாளராக ஐயப்பன் என்ற கண்ணன் ந...