Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
Latest News:

Ads Place

வெள்ளிச்சந்தை அருகே குடும்ப பிரச்சினையில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

வெள்ளிச்சந்தை அருகே காட்டுவிளையை சேர்ந்தவர் அய்யப்பாதாஸ் (வயது 28), பெயிண்டர். இவருக்கும் குளச்சல் அருகே பத்தறையை சேர்ந்த சந்திரன் மகள் பிரி...

வெள்ளிச்சந்தை அருகே காட்டுவிளையை சேர்ந்தவர் அய்யப்பாதாஸ் (வயது 28), பெயிண்டர். இவருக்கும் குளச்சல் அருகே பத்தறையை சேர்ந்த சந்திரன் மகள் பிரியா (24) என்பவருக்கும் கடந்த 2015-ம் ஆண்டு் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 4 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.
கடந்த சில நாட்களாக குடும்ப பிரச்சினை காரணமாக கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால், பிரியா மனமுடைந்த நிலையில் காணப்பட்டு வந்தார். 
இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாருமில்லாத நேரத்தில் பிரியா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைகண்ட குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். 

பின்னர், இதுகுறித்து பிரியாவின் தாயார் ருக்குமணி வெள்ளிச்சந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் பிரியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 
மேலும், பிரியாவின் கணவர் அய்யப்பதாசிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடத்தப்பட உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். 
குடும்ப பிரச்சினையில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்

மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பிப...

மூணாறு விபத்தில் உயிரிழந்த மாணவ-மாணவிகளின் பெற்றோருக்கு நிதி...

மண்டைக்காடு பகவதியம்மன் திருக்கோவில் மாசிக்கொடை விழா மார்ச் ...

மணவாளக்குறிச்சி, பெரியவிளை பகுதியில் 2 வள்ளங்களில் மோட்டார் ...

புதிய கூட்டணியின் பெயர் ‘இந்தியா’ - சேர்ந்து போராடுவோம்: எதி...

மாதவலாயத்தில் கடை திறப்பு விழா பணியின் போது மின்சாரம் பாய்ந்...

மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியப்பட்டணம் பகுதியை சேர்ந்த வால...

மணவாளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் போலீஸ...

மணவாளக்குறிச்சி பகுதியில் மின்சாரம் தாக்கி 10-ம் வகுப்பு மாண...

மணவாளக்குறிச்சி பேரூர் திமுக செயலாளராக ஐயப்பன் என்ற கண்ணன் ந...