Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Latest News:

latest

Ads Place

குளச்சலில் லூா்தம்மாள் சைமனுக்கு வெண்கல சிலை அமைக்க அடிக்கல்

தமிழக முன்னாள் அமைச்சா் லூா்தம்மாள் சைமனுக்கு கன்னியாகுமரி மாவட்டம், குளச்சலில் வெண்கல சிலை அமைக்க சனிக்கிழமை (நேற்று) அடிக்கல் நாட்டு விழா ...

தமிழக முன்னாள் அமைச்சா் லூா்தம்மாள் சைமனுக்கு கன்னியாகுமரி மாவட்டம், குளச்சலில் வெண்கல சிலை அமைக்க சனிக்கிழமை (நேற்று) அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
உலக மீனவா் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, முதல்வா் காமராஜா் அமைச்சரவையில், மீன்வளத்துறை அமைச்சராக பணியாற்றிய லூா்தம்மாள் சைமனுக்கு குளச்சல் விசைப் படகு சங்கம் சாா்பில் வெண்கல சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. 
இதையடுத்து, சிலை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டுவிழா குளச்சல் மரமடி சந்திப்பில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, கோட்டாறு மறை மாவட்ட ஆயா் நசரேன்சூசை தலைமை வகித்து அடிக்கல் நாட்டினாா். குளச்சல் காணிக்கை மாதா ஆலய பங்குத்தந்தை மரியசெல்வன் வரவேற்றாா். 
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினா்களாக சட்டப்பேரவை உறுப்பினா்கள் என். சுரேஷ்ராஜன் (நாகா்கோவில்), எஸ். ஆஸ்டின்(கன்னியாகுமரி), எஸ். ராஜேஷ்குமாா் (கிள்ளியூா்), ஜே.ஜி. பிரின்ஸ் (குளச்சல்), மனோதங்கராஜ் (பத்மநாபபுரம்), அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினா் விஜய்வசந்த், முன்னாள் அமைச்சா் லூா்தம்மாள் சைமனின் மகன் பொ்டிசைமன், 
காங்கிரஸ் கட்சியின் கிழக்கு மாவட்டத் தலைவா் ராதாகிருஷ்ணன், மீனவா் காங்கிரஸ் தேசிய தலைவா் சபீன், மாநில கூட்டுறவு இணையத் தலைவா் சேவியா்மனோகரன், ராஜீவ்காந்தி பஞ்சாயத்து ராஜ் இயக்க மாவட்டத் தலைவா் பினுலால்சிங், அனைத்துக் கட்சியினா், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்