Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Latest News:

latest

Ads Place

கொல்லங்கோடு அருகே பரபரப்பு: உடலில் காயங்களுடன் வாலிபர் - தூக்கில் பிணம்

கொல்லங்கோடு அருகே உடலில் காயங்களுடன் வாலிபர் தூக்கில் பிணமாக தொங்கினார். இதுதொடர்பாக அவருடைய மனைவி, மாமனாரிடம் போலீசார் விசாரணை நடத்தி வரு...

கொல்லங்கோடு அருகே உடலில் காயங்களுடன் வாலிபர் தூக்கில் பிணமாக தொங்கினார். இதுதொடர்பாக அவருடைய மனைவி, மாமனாரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குமரி மாவட்டம் நித்திரவிளை அருகே தூத்தூர் புனித தோமஸ் நகர் பகுதியை சேர்ந்தவர் ஜோனவாய். இவருடைய மகள் ஜாப்லின் (வயது 30). இவர் சென்னையில் கல்லூரியில் படிக்கும் போது, சென்னை ஆர்.கே. நகர் பகுதியை சேர்ந்த ஆன்டணிபால்ராஜ் என்பவருடைய மகன் கார்கியை (35) காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ஜாப்லின் தந்தை மகளுக்கு தூத்தூர் கல்லூரி அருகில் ஒரு கடை மற்றும் தோமஸ் நகரில் புதிய வீடும் கட்டி கொடுத்துள்ளார். கார்கி குடும்பத்துடன் அந்த வீட்டில் வசித்து வந்தார். இந்தநிலையில் கார்கிக்கு மது பழக்கம் இருந்ததாகவும், மனைவியுடன் தகராறு செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கார்கி தூங்க சென்றார். நேற்று காலை ஜாப்லின் எழுந்து பார்க்கும் போது, அறையில் கார்கி தூக்கில் பிணமாக தொங்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஜாப்லின் தனது தந்தை மற்றும் சகோதரனுக்கு தகவல் தெரிவித்தார். உடனே அவர்கள் அங்கு வந்து கார்கியின் உடலை கயிற்றில் இருந்து கீழே இறக்கி கட்டிலில் படுக்க வைத்துவிட்டு அழுது கொண்டு இருந்தனர்.

அப்போது அந்த வழியாக கொரோனா பணிக்காக ஏழுதேசம் சி கிராம அலுவலர் சேம்ராஜ் சென்றார். அப்போது அவர் இறந்த கார்கியின் உடலை பார்த்த போது சில இடங்களில் காயம் இருந்ததை பார்த்து, நித்திரவிளை போலீசுக்கு தகவல் கொடுத்தார்.
அதைத்தொடர்ந்து நித்திரவிளை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் கிராம நிர்வாக அலுவலர் சேம்ராஜ் நித்திரவிளை போலீசில் புகார் செய்தார். அதில் கார்கி சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி இருந்தார்.

அதன் பேரில் நித்திரவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்தவரது மனைவி ஜாப்லின், மாமனார் ஜோனவாய் மற்றும் சகோதரரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்