Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
Latest News:

Ads Place

தக்கலை அருகே தெப்பக்குளத்தில் மூழ்கி பிளஸ்-1 மாணவர் சாவு

தக்கலை அருகே வாழவிளை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் குமார், தொழிலாளி. இவருடைய மகன் சுபின்(வயது 17). சுபின் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியி...

தக்கலை அருகே வாழவிளை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் குமார், தொழிலாளி. இவருடைய மகன் சுபின்(வயது 17). சுபின் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று மாலை சுபின் நண்பர்களுடன் பத்மநாபபுரம் பகுதியில் உள்ள நீலகண்டசாமி கோவில் தெப்பகுளத்துக்கு குளிக்க சென்றார். அங்கு நண்பர்களுடன் உற்சாகமாக குளித்துக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென சுபின் மாயமானார். இதைகண்ட சக நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே, இதுபற்றி தக்கலை தீயணைப்பு நிலையத்துக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜா தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சுபினை தேடும் பணியில் ஈடுபட்டனர். சுபின் உடல் சிக்கியது.

அப்போது சுபின், குளத்தில் ஆழமான பகுதிக்கு சென்றதால் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தது தெரிய வந்தது. இதற்கிடையே தக்கலை சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசாரும் விரைந்து வந்தனர்.
அதைத்தொடர்ந்து சுபினின் உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். பிரேத பரிசோதனைக்காக உடலை தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தெப்பக்குளத்துக்கு குளிக்க சென்ற பிளஸ்-1 மாணவர் தண்ணீரில் மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்

மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பிப...

மூணாறு விபத்தில் உயிரிழந்த மாணவ-மாணவிகளின் பெற்றோருக்கு நிதி...

மண்டைக்காடு பகவதியம்மன் திருக்கோவில் மாசிக்கொடை விழா மார்ச் ...

மணவாளக்குறிச்சி, பெரியவிளை பகுதியில் 2 வள்ளங்களில் மோட்டார் ...

புதிய கூட்டணியின் பெயர் ‘இந்தியா’ - சேர்ந்து போராடுவோம்: எதி...

மாதவலாயத்தில் கடை திறப்பு விழா பணியின் போது மின்சாரம் பாய்ந்...

மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியப்பட்டணம் பகுதியை சேர்ந்த வால...

மணவாளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் போலீஸ...

மணவாளக்குறிச்சி பகுதியில் மின்சாரம் தாக்கி 10-ம் வகுப்பு மாண...

மணவாளக்குறிச்சி பேரூர் திமுக செயலாளராக ஐயப்பன் என்ற கண்ணன் ந...