நாங்குநேரி இடைத்தேர்தலையொட்டி சவரைக்காரக்குளம் பகுதியில் திமுக சார்பில் தேர்தல் பிரச்சார கிராம சபை கூட்டம் நடைபெற்றது. நாங்...
நாங்குநேரி இடைத்தேர்தலையொட்டி சவரைக்காரக்குளம் பகுதியில் திமுக சார்பில் தேர்தல் பிரச்சார கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

நாங்குநேரி சவரைக்காரக்குளம் ஊராட்சி பகுதியில் கிராமசபை கூட்டம் மற்றும் திண்ணை பிரச்சாரம் திமுக கட்சித் தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

பிரச்சாரத்தில் திமுக கூட்டணிக்கட்சி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ரூபி மனோகரனுக்கு ஆதரவாக திண்ணை பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

குமரி மாவட்ட திமுக செயலாளர் சுரேஷ் ராஜன், கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் ஆஸ்டின் ஆகியோர் பிரச்சார நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

குருந்தன்கோடு கிழக்கு ஒன்றிய செயலாளர் குட்டிராஜன், மாவட்ட துணை செயலாளர் அர்ஜுனன், தக்கலை ஒன்றிய செயலாளர் ரமேஷ் பாபு, குருந்தன்கோடு கிழக்கு மாவட்ட இளைஞரணி செயாளர் ஜெயராஜ், முன்னாள் குளச்சல் நகரமன்ற உறுப்பினர் நூர் முஹம்மது, மணவாளக்குறிச்சி பேரூர் செயலாளர் நிஜாம் மற்றும் மன்சூர், அருள்தாசன், ஜெகன், ஸ்டாலின் உள்பட கழக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
















No comments