Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
Latest News:

Ads Place

தக்கலை அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி

தக்கலை அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து காட்சி சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. தக்கலை அரு...

தக்கலை அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து காட்சி சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
தக்கலை அருகே காட்டாத்துறை பகுதியை சேர்ந்தவர் விஜின் (வயது30), கொத்தனார். இவருக்கு திருமணம் செய்து வைக்க உறவினர்கள் வரன் பார்த்து வந்தனர்.
இந்நிலையில் விஜின் நேற்று முன்தினம் மாலை வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் மார்த்தாண்டம் நோக்கி புறப்பட்டார். புலிப்பனம் அருகே சென்று கொண்டிருந்த போது முன்னால் சென்ற மோட்டார் சைக்கிளை முந்தி செல்ல முயன்றதாக தெரிகிறது.
அப்போது எதிர்பாராதவிதமாக விஜின் சென்ற மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கீழே விழுந்தது. இதில் விஜின் சாலையில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.

உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், விஜின் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதனையடுத்து விஜினின் உடலை தக்கலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே இந்த விபத்து தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருவது பரபரப்பை ஏற்படுத்து உள்ளது.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்

மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பிப...

மூணாறு விபத்தில் உயிரிழந்த மாணவ-மாணவிகளின் பெற்றோருக்கு நிதி...

மண்டைக்காடு பகவதியம்மன் திருக்கோவில் மாசிக்கொடை விழா மார்ச் ...

மணவாளக்குறிச்சி, பெரியவிளை பகுதியில் 2 வள்ளங்களில் மோட்டார் ...

புதிய கூட்டணியின் பெயர் ‘இந்தியா’ - சேர்ந்து போராடுவோம்: எதி...

மாதவலாயத்தில் கடை திறப்பு விழா பணியின் போது மின்சாரம் பாய்ந்...

மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியப்பட்டணம் பகுதியை சேர்ந்த வால...

மணவாளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் போலீஸ...

மணவாளக்குறிச்சி பகுதியில் மின்சாரம் தாக்கி 10-ம் வகுப்பு மாண...

மணவாளக்குறிச்சி பேரூர் திமுக செயலாளராக ஐயப்பன் என்ற கண்ணன் ந...