Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
Latest News:

Ads Place

வெள்ளிச்சந்தை அருகே அரிவாளால் வெட்டி இளம்பெண் படுகொலை: கணவன் கைது

வெள்ளிச்சந்தை அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு அரிவாளால் வெட்டி இளம்பெண் படுகொலை செய்யப்பட்டார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட கணவர் தலைமறைவாகி வ...

வெள்ளிச்சந்தை அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு அரிவாளால் வெட்டி இளம்பெண் படுகொலை செய்யப்பட்டார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட கணவர் தலைமறைவாகி விட்டார்.
குமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை அருகே ஈத்தங்காட்டை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 37). இவருடைய மனைவி உமா (33). இவர்களுக்கு அஜித் (11) என்ற மகனும், காவியா (9) என்ற மகளும் உள்ளனர்.

ரமேஷ் வெள்ளிச்சந்தை போலீஸ் நிலையம் அருகில் சொந்தமாக பைகள் தைக்கும் கடை நடத்தி வருகிறார். சந்தோசமாக குடும்பம் நடத்தி வந்த கணவன்-மனைவி இடையே கடந்த சில மாதங்களாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதற்கிடையே மனைவியின் நடத்தையில் ரமேசுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இந்த சந்தேகத் தீ, மனைவி மீது அவருக்கு வெறுப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் சம்பவத்தன்று இரவு வழக்கம் போல் வீட்டில் அனைவரும் படுத்து தூங்கினர். நள்ளிரவில் ரமேஷின் வீட்டில் இருந்து உமாவின் குழந்தைகள் அலறல் சத்தம் கேட்டது. இந்த சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.

உள்ளே சென்று பார்த்தபோது, உமா கழுத்தில் வெட்டுக்காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அருகில் குழந்தைகள் கதறி அழுதபடி இருந்தனர்.
உடனே உமாவை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், உமா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து வெள்ளிச்சந்தை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த குளச்சல் உதவி போலீஸ் சூப்பிரண்டு விஸ்வேஸ் சாஸ்திரி, வெள்ளிச்சந்தை இன்ஸ்பெக்டர் முத்துராமன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
முதற்கட்ட விசாரணையில் ரமேஷ், மனைவி உமா மீது சந்தேகப்பட்டு அவரை அரிவாளால் வெட்டி கொடூரமாக கொலை செய்து விட்டு தப்பிச் சென்றது தெரியவந்தது.

மேலும், இதுகுறித்து வெள்ளிச்சந்தை போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பிச் சென்ற ரமேஷை வலைவீசி தேடி வந்தனர்.
ரமேசை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று இரவு தனிப்படை போலீசார் ரமேசை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ரமேசிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தில் இளம்பெண்ணை, கணவரே கொடூரமாக கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்

மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பிப...

மூணாறு விபத்தில் உயிரிழந்த மாணவ-மாணவிகளின் பெற்றோருக்கு நிதி...

மண்டைக்காடு பகவதியம்மன் திருக்கோவில் மாசிக்கொடை விழா மார்ச் ...

மணவாளக்குறிச்சி, பெரியவிளை பகுதியில் 2 வள்ளங்களில் மோட்டார் ...

புதிய கூட்டணியின் பெயர் ‘இந்தியா’ - சேர்ந்து போராடுவோம்: எதி...

மாதவலாயத்தில் கடை திறப்பு விழா பணியின் போது மின்சாரம் பாய்ந்...

மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியப்பட்டணம் பகுதியை சேர்ந்த வால...

மணவாளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் போலீஸ...

மணவாளக்குறிச்சி பகுதியில் மின்சாரம் தாக்கி 10-ம் வகுப்பு மாண...

மணவாளக்குறிச்சி பேரூர் திமுக செயலாளராக ஐயப்பன் என்ற கண்ணன் ந...