கன்னியாகுமரி அருகே உள்ள கொட்டாரம் மகராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் ரவீந்திரன். இவரது மகன் பாலசந்தர் (வயது 28). கடந்த 13-ம் தேதி தனது பைக்கில் ம...
கன்னியாகுமரி அருகே உள்ள கொட்டாரம் மகராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் ரவீந்திரன். இவரது மகன் பாலசந்தர் (வயது 28).

கடந்த 13-ம் தேதி தனது பைக்கில் மணவாளக்குறிச்சி பகுதியில் வந்து கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுவன் ஓட்டிவந்த பைக் இவரது பைக் மீது மோதியது.
இதில் பாலசந்தர் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். பொதுமக்கள் அவரை மீட்டு நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிட்சை அளிக்கப்படுகிறது. இது குறித்து மணவாளக்குறிச்சி போலீசில் புகார் செய்தனர். போலீசார் சிறுவன் மற்றும் பைக்கை ஓட்ட கொடுத்த அவரது தந்தை அழகேசன் ஆகியோர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
















No comments