Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
Latest News:

Ads Place

கேரளாவில் ஜனவரி 5 முதல் திரையரங்குகளை திறக்க அனுமதி - பினராயி விஜயன்

கேரளாவில் ஜனவரி 5-ஆம் தேதி முதல் திரையரங்குகளை திறக்க அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளார். கொரோனா பரவல் காரணமாக...

கேரளாவில் ஜனவரி 5-ஆம் தேதி முதல் திரையரங்குகளை திறக்க அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் ஊரடங்க அமல்படுத்தப்பட்டது. பின்னர் படிப்படியாக தளர்வுகளை மத்திய, மாநில அரசுகள் அறிவித்து வருகின்றன. 
அந்த வகையில், கேரளாவில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. கேரளாவில் சுமார் 9 மாதங்களுக்கு பின் நேற்று முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், தற்போது மேலும் சில தளர்வுகளை அறிவித்துள்ளார் அம்மாநில முதல்வர் பினராயி விஜயன். 

கேரளாவில் ஜனவரி 5 முதல் 50% பார்வையாளர்களுடன் திரையரங்குகளை திறக்க அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளார். 
ஜனவரி 5-ஆம் தேதி முதல் வழிபாட்டு தலங்கள், கலை நிகழ்ச்சிகள் மற்றும் பொது நிகழ்ச்சிகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் அரங்கங்களில் நிகழ்ச்சி நடத்தினால் 100 பேரும், வெளியே நிகழ்ச்சி நடத்தினால் 200 பேரும் பங்கேறக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இதனிடையே, நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு நாடு முழுவதும் திரைக்கு வர உள்ள நிலையில், கேரளாவில் திரையரங்குகளை திறக்க அனுமதிக்குமாறு விஜய் ரசிகர் மன்றத்தினர் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்

மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பிப...

மூணாறு விபத்தில் உயிரிழந்த மாணவ-மாணவிகளின் பெற்றோருக்கு நிதி...

மண்டைக்காடு பகவதியம்மன் திருக்கோவில் மாசிக்கொடை விழா மார்ச் ...

மணவாளக்குறிச்சி, பெரியவிளை பகுதியில் 2 வள்ளங்களில் மோட்டார் ...

புதிய கூட்டணியின் பெயர் ‘இந்தியா’ - சேர்ந்து போராடுவோம்: எதி...

மாதவலாயத்தில் கடை திறப்பு விழா பணியின் போது மின்சாரம் பாய்ந்...

மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியப்பட்டணம் பகுதியை சேர்ந்த வால...

மணவாளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் போலீஸ...

மணவாளக்குறிச்சி பகுதியில் மின்சாரம் தாக்கி 10-ம் வகுப்பு மாண...

மணவாளக்குறிச்சி பேரூர் திமுக செயலாளராக ஐயப்பன் என்ற கண்ணன் ந...