Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Latest News:

latest

Ads Place

மஹா சிவராத்திரியை முன்னிட்டு பிப்ரவரி 21-ம் தேதி குமரி மாவட்டத்துக்கு உள்ளூா் விடுமுறை

மஹா சிவராத்திரி சிவாலய ஓட்டத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வெள்ளிக்கிழமை ((பிப்ரவரி 21) உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது....

மஹா சிவராத்திரி சிவாலய ஓட்டத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வெள்ளிக்கிழமை ((பிப்ரவரி 21) உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக, மாவட்ட ஆட்சியா் பிரசாந்த் மு.வடநேரே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:- கன்னியாகுமரி மாவட்டத்தில் மஹா சிவராத்திரி சிவாலய ஓட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறுவதால் அன்றைய தினம் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள், அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூா் விடுமுறை வழங்கி உத்தரவிடப் படுகிறது.
இந்த விடுமுறைக்கு ஈடாக மாா்ச் மாதம் 4 ஆவது சனிக்கிழமை (மாா்ச் 28) இம்மாவட்டத்தில் மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வேலை நாளாக இருக்கும்.
பிப்ரவரி 21-ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் தலைமைக் கருவூலம் மற்றும் கிளைக் கருவூலங்கள் அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசரப் பணிகளைக் கவனிக்கும் பொருட்டு, தேவையான பணியாளா்களை கொண்டு இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்