Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Latest News:

latest

Ads Place

நாகர்கோவிலில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா ஆர்ப்பாட்டம்: 316 பேர் கைது

பாபர் மசூதி நிலம் யாருக்கு சொந்தம் என்ற வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பில் உள்ள முரண்பாடுகளையும், நீதி மறுப்பின் நிலைமையும் மக்களிடம் கொண்டு...

பாபர் மசூதி நிலம் யாருக்கு சொந்தம் என்ற வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பில் உள்ள முரண்பாடுகளையும், நீதி மறுப்பின் நிலைமையும் மக்களிடம் கொண்டு செல்லும் விதமாக “பாபர் மஸ்ஜித் தீர்ப்பு மறுக்கப்பட்ட நீதி” என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்துவது என எஸ்.டி.பி.ஐ முடிவு செய்திருந்தது.
அதன்படி, நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பும் ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டதால், நேற்று மதியம் முதல் ஏஎஸ்பி ஜவஹர் தலைமையில் ஏடிஎஸ்பி விஜயபாஸ்கர், டிஎஸ்பி பீட்டர்பால் மற்றும் 100க்கும் மேற்பட்ட போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
இந்நிலையில் நேற்று மாலை பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா குமரி மாவட்ட தலைவர் மாஹீன் அபூபக்கர் தலைமையில் ஏராளமானோர் கலெக்டர் அலுவலகம் முன்பு குவிந்தனர்.
அப்போது உச்சநீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக ஆர்ப்பாட்டம் நடத்தக்கூடாது என ஏஎஸ்பி ஜவஹர் ஆர்ப்பாட்டக்காரர்களிடம் கூறினார். இதனால் அங்கு சிறிது பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.
அதனை தொடர்ந்து மாவட்ட தலைவர் மாஹீன் அபூபக்கர், கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் சுல்பிக்கர் அலி மற்றும் நிர்வாகிகள், பெண்கள் என மொத்தம் 316 பேரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி ராமன்புதூர் ப்[பகுதியில் உள்ள ஒரு மண்டபத்தில் வைத்தனர்.
பின்னர் இரவு 7.30 மணி அளவில் அனைவரையும் போலீசார் விடுவித்தனர்.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்