குமரி மாவட்டத்தில் காவல்கிணறு முதல் களியக்காவிளை வரை உள்ள தேசிய நெடுஞ்சாலை மற்றும் கன்னியாகுமரி முதல் காவல்கிணறு வரை தேசிய நெடுஞ்சாலை குண்...
குமரி மாவட்டத்தில் காவல்கிணறு முதல் களியக்காவிளை வரை உள்ள தேசிய நெடுஞ்சாலை மற்றும் கன்னியாகுமரி முதல் காவல்கிணறு வரை தேசிய நெடுஞ்சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது.

இதைத்தொடர்ந்து இன்று (16-11-2019) நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் மற்றும் களியக்காவிளையில் காங்கிரஸ் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு வசந்தகுமார் எம்.பி. தலைமையில் மறியல் போராட்டம் நடந்தது.

களியக்காவிளை பஸ் நிலையம் முன்பு நடந்த மறியல் போராட்டத்துக்கு ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். விஜயதரணி எம்.எல்.ஏ. உள்பட ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நடுரோட்டில் நின்றபடி அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

அவர்கள் மறியலில் ஈடுபட்ட காங்கிரசாருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதனை ஏற்காமல் காங்கிரசார் மறியலை தொடர்ந்தனர். இதைத்தொடர்ந்து அவர்களை கைது செய்வதாக போலீசார் அறிவித்தனர். போராட்டத்தில் காங்கிரஸ் தொண்டர் ஒருவர் ரோட்டில் பிணமாக கிடப்பது போன்று நடித்து காட்டினார். அவரை தோளில் தூக்கியபடி காங்கிரசார் ஊர்வலமாக சென்றனர்.
மறியலில் ஈடுபட்ட எம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ்குமார், விஜயதரணி உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோர் கைதானார்கள்.
No comments