Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Latest News:

latest

Ads Place

இடைத்தேர்தல் தேர்தல் வெற்றி: அ.தி.மு.க. கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

தமிழகத்தில் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய 2 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் 2 இடங்களிலும் அ.தி.மு.க. ...

தமிழகத்தில் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய 2 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் 2 இடங்களிலும் அ.தி.மு.க. வெற்றி பெற்றது.
இதேபோல் அரியானா மாநிலத்திலும், மராட்டிய மாநிலத்திலும் நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜனதா கட்சி அதிக இடங்களை கைப்பற்றியுள்ளது.
இதையடுத்து குமரி மாவட்டத்தில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் எஸ்.ஏ.அசோகன் தலைமையில் நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையம் முன்பு பட்டாசு வெடித்து கொண்டாடினர். அப்போது அ.தி.மு.க. தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் நிர்வாகிகள் கண்ணன், சந்திரன், லதா ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் வடசேரியில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்தும் மரியாதை செலுத்தப்பட்டது. இதையடுத்து மீனாட்சிபுரம் உள்ளிட்ட மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் அ.தி.மு.க. சார்பில் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடப்பட்டது.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்