Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Latest News:

latest

Ads Place

குமரி இன்போ

கன்னியாகுமரி மாவட்டம் கன்னியாகுமரி மாவட்டம் , தமிழ் நாட்டின் முப்பத்தொரு மாவட்டங்களில் ஒன்று ஆகும்.இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ள...

கன்னியாகுமரி மாவட்டம்
கன்னியாகுமரி மாவட்டம், தமிழ் நாட்டின் முப்பத்தொரு மாவட்டங்களில் ஒன்று ஆகும்.இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ள இம்மாவட்டத்தின் தலைநகரம் நாகர்கோவில் ஆகும். இது தமிழகத்தின் மூன்றாவது வளர்ச்சியடைந்த மாவட்டமாகும்.
இயற்கை அழகுக்கு பெயர் போன இம்மாவட்டத்தில் ஒன்பதாம் நூற்றாண்டுக்கும் முந்தைய பல வரலாற்றுச் சின்னங்களும் அமைந்திருப்பதால் சுற்றுலா பயணிகளுக்கு இது ஒரு சுவர்க்கமாக திகழ்கிறது. இம்மாவட்டத்தின் மேற்கு எல்லையாக கேரளமாநிலமும் வடக்கு மற்றும் கிழக்கு எல்லைகளாக தமிழகத்தின் நெல்லை மாவட்டமும் திகழ்கிறன.
2006 டிசம்பர் 26 அன்று தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கடற் பகுதிகளை கடுமையாகத் தாக்கிய சுனாமிப் பேரலை இம்மாவட்டத்தையும் பெரும் நாசத்துக்கு உள்ளாக்கியது.

வரலாறு
கன்னியாகுமரி என்ற பெயர் இப்பகுதியில் புகழ்பெற்ற கன்னியாகுமரி அம்மன் என்னும் தேவதையை மையப்படுத்தும் தல புராணத்திலிருந்து இம்மாவட்டத்துக்கு கிடைத்திருக்கிறது. இது பார்வதி தேவி தன்னுடைய ஒரு அவதாரத்தில் 'குமரிப் பகவதி' என்னும் பெயருடன் சிவனை சேரும் பொருட்டு இந்நிலப் பகுதியின் தென்கோடியில் அமைந்துள்ள ஒரு பாறையில் தவம் செய்ததாக கூறுகிறது.
இப்பகுதியில் பொதுவாக அழைக்கப்படும் 'நாஞ்சில் நாடு', 'இடை நாடு' ஆகிய பகுதிகளை இம்மாவட்டம் உள்ளடக்குகிறது. இப்பகுதியில் நிரம்ப வயல்கள் இருந்ததால், நிலத்தை (வயலை) உழ பயன்படும் நாஞ்சிலிலிருந்து (கலப்பை) இந்நிலப்பரப்புக்கு இப்பெயர் வந்தது என்பது பெயரியல் நிபுணர்கள் துணிபு. தற்போது அகத்தீஸ்வரம் மற்றும் தோவாளை வட்டங்களாக இருக்கும் நாஞ்சில் நாடு, பத்தாம் நூற்றாண்டின் முதற்பகுதி வரை பாண்டியர்களின் ஆட்சிப்பகுதியாக இருந்து பின் சேரர்கள்வசம் வந்ததாகத் தெரிகிறது.
தற்போது கல்குளம், விளவங்கோடு வட்டங்களாக இருக்கும் இடை நாடு, சேரர்கள் ஆட்சிப்பகுதியாக இருந்தது. பின்ஓய்சலயர்கள் மற்றும் மேற்கு சாளுக்கியர்களின் வளர்ச்சியினால் சேரர்கள் வலுவிழந்தனர். இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட (வேணாடு) திருவிதாங்கூர் மன்னர்கள் நாஞ்சில் நாட்டின் பெரும்பான்மைப் பகுதிகளை கைவசப்படுத்திக்கொண்டனர். வீர கேரள வர்மாவால் துவங்கப்பட்ட இக் கைப்பற்றுக்கொள்கை அவரின் பின்காமிகளால் பெரிதும் விரிவுபடுத்தப்பட்டு கி.பி.1115 -ஆம் ஆண்டு நிறைவுசெய்யப்பட்டது.

ஏறக்குறைய நான்கு நூற்றாண்டுகள் வேணாட்டை ஆண்டு வந்த வீர மன்னர்கள், தொடர்ந்து பக்கத்து பாண்டிய மன்னர்களுடன் எல்லைத் தகராறில் ஈடுபட்டு வந்ததால் விஜயநகர மன்னர்கள் இவர்களுக்கு எதிராகப் படையெடுத்தனர். இதன் விளைவாக, கன்னியாகுமரி, 1609- ஆம் ஆண்டு மதுரை, விஸ்வநாத நாயக்கரின் வலுவான கரங்களுக்குள்ளானது. இதன் விளைவாக 1634 வரை நாஞ்சில் நாட்டுக்கு எந்த விதமான வலுவான அச்சுறுத்தல்களும் இல்லாமல் இருந்தது. பின்னர் ரவி வர்மா,மார்த்தாண்ட வர்மா, ஆகிய அரசர்களின் காலகட்டத்தில் வேணாடு கடும் உள்நாட்டு குழப்பங்களை சந்தித்தது. இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட ஆற்காடு சந்தா சாகிபு நாஞ்சில் நாட்டை தாக்கினார். குளச்சல் போரில் மார்த்தாண்ட வர்மா டச்சு போர்வீரர்களை வெற்றிகொண்ட போதிலும் சந்தா சாகிபுவை சமாளிக்க முடியாததால் போர்க்களத்தை விட்டு பின்வாங்க வேண்டியிருந்தது. மார்த்தாண்ட வர்மாவுக்கு பிறகு வந்த மன்னர்கள் அனைவரும் வலுவற்றவர்களாக இருந்ததால்ஆங்கிலேயர்களின் தலையீடு இந்நாட்டின் மீது அவ்வப்போது இருந்து வந்து, பின் படிப்படியாக அவர்களின் முழு கட்டுப்பாட்டுக்கு வந்த வேணாட்டை 1947 வரை அவர்களே ஆண்டுவந்தனர்.
பின் அது 1947 முதல் 1956 வரை திருவிதாங்கூர் மன்னரின் சுய ஆளுகைக்குள் இருந்தது. கன்னியாகுமரி மாவட்ட மக்களின் தாய்மொழி தமிழாக இருந்தாலும் அவர்கள் மலையாள மொழிப் பகுதியாகிய கேரளத்தோடு இணைந்திருக்க விரும்பவில்லை. மேலும், கன்னியாகுமரி மாவட்டத்தின் வளர்ச்சி கேரள அரசால் புறக்கணிக்கப்பட்டது. இந்நிலையில் மார்ஷல் நேசமணி தலைமையில் விடுதலைப் போராட்டம் வெடித்தது. 1956, நவம்பர் முதல் நாள் குமரி மாவட்டம் தமிழ் நாட்டின் பகுதியாக மாறியது.
இம்மாவட்டத்தின் முதல் மாவட்ட ஆட்சியர், திரு. திருமலை IAS , 01.11.1956 அன்று பொறுப்பு அமர்ந்தார்.

புவியியல்
இம்மாவட்டம், முன்பு நூற்றுக்கணக்கான நீர்நிலைகள் மற்றும் சிறந்த வாய்க்கால் விவசாயம் ஆகியவற்றின் மூலம் திருவிதாங்கூரின் களஞ்சியம் என அறியப்பட்டது. ரப்பர் மற்றும் நறுமணப்பொருள்கள் மலைச்சரிவுகளிலும் நெல், வாழை,தென்னை ஆகியன கடற்கரையை ஒட்டிய சமபூமிகளிலும் பெருமளவில் காணப்படுகின்றன. இம்மாவட்டம் பொதுவாக மலை சார்ந்த பகுதிகளாகவும், கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் சமபூமியாகவும் காட்சியளிக்கிறது. நிலப்பரப்பின் உயரம் கடற்கரையிலிருந்து மேற்குத் தொடர்ச்சி மலைகளை நோக்கி மெதுவாக உயர்கிறது. இம்மாவட்டதிற்கு 62 கி.மீ மேற்குக் கடற்கரையும், 6 கி.மீ கிழக்கு கடற்கரையும் உள்ளன. இம்மாவட்டத்தின் நிலப்பகுதியில் 48.9% விவசாய நிலமாகவும், 32.5% அடர்ந்த காட்டுப் பகுதியாகவும் இருக்கிறது.
மாவட்டத்தின் கடற்கரைகள் பல பாறை மயமாகவும் மற்றவிடங்கள் வெள்ளை மணற்பகுதியாகவும் காணப்படுகின்றன. கிழக்கு கடற்கரைகளில் பவழப்பாறைகளின் அம்சங்கள் (பெரும்பாலும் அழிந்திருந்தாலும்) பல காணப்படுகின்றன. பல வகையான வண்ண சங்கு வகைகளும் காணப்படுகின்றன. மேலும் சில கடற்கரைப் பகுதிகளில் காணப்படும் மணல் தாது வளம் நிறந்ததாக இருக்கிறது.

தட்பவெப்ப நிலை
கடந்த ஐம்பது ஆண்டு கால ஆய்வில், வடகிழக்கு பருவக்காற்று வீசும் அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை, 24 மழை நாட்களில் 249 மி.மீ மழையும், தென்மேற்கு பருவக்காற்று வீசும் ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை 27 மழை நாட்களில் 537 மி.மீ. மழை பெய்திருக்கிறது. இதுவே மார்ச் முதல் மே மாதம் வரையிலான வேனில் காலத்தில் 11 மழை நாட்களில் 332 மி.மீ மழையும் பதிவாகி இருக்கிறது. மாவட்டத்தின் ஒரு ஆண்டு சராசரி மழை 1465 மி,மீ. இதில் அக்டோபர் மாத அளவான 247 மி.மீ அதிகபட்சமாகவும், பெப்ரவரி மாத அளவான 21 மி.மீ குறைந்தபட்சமாகவும் இருக்கிறது. மாவட்டத்தின் ஈரப்பதம் 60 முதல் 100 சதவிகிதமாக இருக்கிறது.
ஆறுகள்
இம்மாவட்டத்தின் முக்கிய நதிகள் தாமிரபரணி, வள்ளியாறு, பழையாறு ஆகியன.

தாமிரபரணி


இந்நதி குழித்துறையாறு என பரவலாக அறியப்படுகிறது. இதற்கு இரண்டு துணை ஆறுகள் உள்ளன. அவை கோதையாறு மற்றும் பரளியாறு ஆகியன. இவைகள் முறையே பேச்சிப்பாறை மற்றும் பெருஞ்சாணி அணைக்கட்டுகளிலிருந்து வருகின்றன. மேலும் கோதையாறு ஆற்றுக்கும் இரண்டு துணை ஆறுகள் உள்ளன. இவைசிற்றாறு - 1, மற்றும் சிற்றாறு - 2 ஆகும். மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் இந்தத் தாமிரபரணி கன்னியாகுமரிக்கு 56 கி.மீ மேற்காக அமைந்திருக்கும்தேங்காய்ப்பட்டணம் என்னும் சிற்றூரில் அரபிக் கடலில் கலக்கிறது.

வள்ளியாறு

இவ்வாறும் இதன் ஒரு துணை ஆறாகிய தூவலாறும், வேளிமலை மலையில் உற்பத்தியாகி, பி.பி.கால்வாய், மற்றும் அதன் பிரிவுக் கால்வாய்களிலிருந்தும் வரும் ஓடைகளின் நீரையும் வாங்கிக்கொண்டு, மணவாளக்குறிச்சி அருகே அரபிக்கடலில் கலக்கிறது.

பழையாறு

இவ்வாறு நாகர்கோவிலுக்கு 18 கி.மீ வடமேற்காக அமைந்திருக்கும் சுருளகோடு என்னும் சிற்றூரில் தொடங்குகிறது. இது தோவாளை, அனந்தன் நகர், மற்றும் என்.பி. கால்வாய்களின் ஓடைகளின் நீர்களை வாங்கும் ஒரு ஓடையாறாகவே இருக்கிறது. மணக்குடியில் கடலில் கலக்கிறது.

தாவர மற்றும் விலங்கு வகைகள்

கீரிப்பாறை பகுதிகளில் பல வகைப்பட்ட பேரணிச் செடிகளையும் பல வெப்பமண்டல தாவர வகைகளையும் பார்க்க முடியும். பேச்சிப்பாறை பகுதிகளில் சிவப்பு மற்றும் இளஞ்சிவப்பு இலைகளியும் பூக்களையும் உடைய மரங்கள், பச்சை படர்ந்த காட்டுப்பகுதிகளுக்கு மத்தியில் ஜொலிப்பதை பார்க்க முடியும்.

இம்மாவட்டத்தில் காணப்படும் விலங்குகளில் முள்ளம் பன்றி, காட்டுப் பன்றி, பல்லி வகைகள், பல இன கொக்கு, நாரை, நீர்க்கோழி, மலைப் பாம்பு, பல வகைப் பாம்புகள்உட்பட பல வகைப்பட்ட ஊர்வன ஆகியவை அடங்கும்.மேலும் மகேந்திரகிரி மலையில் (கடல் மட்டத்திலிருந்து 4000 அடி உயரத்துக்கு மேல்) முயல்கள், மான்கள்,சிறுத்தை ஆகியவற்றை காண முடியும். அதன் அருகாமையிலுள்ள நெடுஞ்சாலையில் சிறுத்தை குட்டிகள் சாதாரணமாக வந்து போவதை பார்க்க முடியும். கீரிப்பாறைசார்ந்த பகுதிகள் யானைகள், காட்டு எருமை, கரடி போன்ற விலங்கினங்களின் உறைவிடமாகத் திகழ்கிறது. தேரூர் பகுதியில் பல வகையான கொக்குகளை சில குறிப்பிட்ட காலச் சூழல்களில் பார்க்க முடியும்.

மருத்துவ வரலாறு
இம்மாவட்டத்துக்கு இயற்கை பல அரிய மூலிகை வகைகளையும் தாது வளங்களையும் தாங்கும் மலைகளையும் நன்கொடையாகத் தந்திருக்கிறது. கன்னியாகுமரிக்கு அருகாமையில் அமைந்திருக்கும் மருந்துவாழ் மலை அசோகர்காலகட்டத்தில் வாழ்ந்த புத்த பிக்குக்களால் மருத்துவ மற்றும் ஆன்மீக பாரம்பரியம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இம்மலை இராமருக்கும் இராவணனுக்கும் இடையில் நடந்த காப்பிய யுத்தத்தின் போது, அனுமன் சுமந்து சென்ற Gandha Madhana மலையின் உடைந்து விழுந்த பகுதியாக இதன் புராணாக் குறிப்பு கூறுகிறது. இம்மலையில் பல அரிய வகை மூலிகைகள் அதிக அளவில் உள்ளன.
மேலும் செந்தமிழின் முதல் இலக்கண ஆசிரியரும், முதல் சித்தருமான அகத்தியர் இந்நிலப்பரப்பின் எல்லையில் வாழ்ந்ததாக நம்பப்படுகிறது. இப்பகுதியில் அகஸ்தீஸ்வரம் என்னும் ஊரும் உள்ளது. இவ்வூருக்கும் இப்பெயர் ஒரு குறு முனிவரிடமிருந்து வந்ததாக நம்பப்படுகிறது. இவ்வூரில் அகஸ்தீஸ்வரால், அகஸ்தீஸ்வரமுடையாருக்குசமர்ப்பிக்கப்பட்டதாக நம்பப்படும் ஒரு கோயிலுமுள்ளது. மருத்துவம், இலக்கணம் மட்டுமல்லாமல் வர்ம சாஸ்திரத்திலும் அகத்தியர் திறம்படைத்தவராவார். பிரபல பனை ஓலை எழுத்தாக்கங்களான வர்மாணி, வர்ம சாஸ்திரம் ஆகியன அவரால் இயற்றப்பட்டவைகளாகும். இன்றும் இந்த வர்ம வைத்திய முறைகள் கன்னியாகுமரிப் பகுதிகளில் குரு-சிஷ்ய முறையில் கற்பிக்கப்படுகிறது. மேலும் இந்த தமிழ் வைத்திய முறையை பயன்படுத்தி இத்துறையில் வல்லுனர்களால் மருத்துவம் செய்யப்படுகிறது.

பண்பாடு
இம்மாவட்டத்தில் வாழ்கின்ற மக்களின் முதன்மை மொழி தமிழ் ஆகும். மலையாளம் பேசுகின்ற சிறுபான்மையோரும் உள்ளனர்.

சமயம்

இந்துக்கள் மற்றும் கிறித்தவர்கள் இம்மாவட்டத்தில் கணிசமான சதவிகிதத்தில் உள்ளனர். மேலும் இஸ்லாமியப் பெரும்பான்மை மண்டலங்களும் இங்கு உண்டு. இம்மாவட்ட கிறிஸ்தவர்களின் சதவிகிதம், அவர்களின் தேசிய சதவிகிதத்தை விட அதிகம். 2001 மக்கள் தொகைக் கணககுப்படி, கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்துக்கள் 51.27%, கிறித்தவர்கள் 44.47%, இசுலாமியர் 4.20%, பிறர் 0.057% உள்ளனர்.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோன்றிய சமயமான அய்யாவழியின் பிறப்பிடமும் கன்னியாகுமரி மாவட்டமாகும். மேலும் இச்சமயத்தினரால் மொத்த குமரி மாவட்டமே புனிதமாக கருதப்படுகிறது.மேலும், திருவிதாங்கூர் சமஸ்தானத்தில், குறிப்பாக தற்போது குமரி மாவட்டமாக உள்ள தென் திருவிதாங்கூரில் கிறிஸ்தவ மறைபரப்பாளர்கள் ஆங்கில கல்வியின் முன்னோடிகளாக திகழ்ந்தனர். இங்கு ஏற்பட்ட கல்வியறிவின் வளர்ச்சியாலும் இதர காரணங்களாலும் சாதி முறை பெருமளவில் வலுவிழந்து காணப்படுகிறது.
இம்மாவட்டத்தின் மக்கள் சாதி, மத இன, வேறுபாடுகளின்றி பழகுகின்றபொழுதும் இங்கு 1980 களில் இங்கு பெரிய அளவில் மதக்கலவரம் வெடித்தது. மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசி கொடை விழாவின் போது இந்துக்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையில் வெடித்த இக்கலவரம், பல்வேறு விதங்களில் பரவிய வதந்திகளின் காரணமாக பரவியதாகத் தெரிகிறது. இக்கலவரத்தில் ராஜாக்கமங்கலம், ஈத்தாமொழி,பிள்ளைத்தோப்பு, நாகர்கோவில் ஆகிய இடங்களில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. கலவரத்தை அடக்கும் விதத்தில் நடந்த இந்தத் துப்பக்கிசூட்டில் பல பொது மக்களும் கொல்லப்பட்டனர்.

பொருளாதாரம்
தமிழ் நாட்டின் மொத்த ரப்பர் உற்பத்தியில் 95% கன்னியாகுமரி மாவட்டத்தில் உற்பத்தியாகிறது. காற்றாலைகளுக்கு மாவட்டத்தின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு உண்டு. ஆரல்வாய்மொழி பகுதியில் இவை அதிக அளவில் அமைக்கப்பட்டுள்ளன.

விவசாயம்

முக்கிய பயிர்வகைகள்

  1. அரிசி - 400 ச.கி.மீ
  2. தென்னை - 210 ச.கி.மீ
  3. ரப்பர் - 194.78 ச.கி.மீ
  4. மரவள்ளிக்கிழங்கு - 123.50 ச.கி.மீ
  5. வாழை - 50 ச.கி.மீ
  6. பருப்பு - 30 ச.கி.மீ
  7. முந்திரி - 20 ச.கி.மீ
  8. பனை - 16.31 ச.கி.மீ
  9. மாம்பழம் - 17.70 ச.கி.மீ
  10. புளி - 13.33 ச.கி.மீ
  11. கமுகு - 9.80 ச.கி.மீ
  12. பலா - 7.65 ச.கி.மீ
  13. கிராம்பு - 5.18 ச.கி.மீ

கைவினைப் பொருட்கள் மற்றும் குடிசைத் தொழில்

குமரி மாவட்டம் கைவினைப் பொருட்களுக்கு பெயர் போன மாவட்டமாகும். குறிப்பாக தோல் நீக்கப்படாத தேங்காயில் செய்யப்படும் குரங்கு பொம்மைகள், தேங்காய் ஓடு மற்றும் மரத்தால் செய்யப்படும் கைவினைப் பொருட்கள் ஆகியன முக்கியமானவை. மேலும் சங்கினாலான கைவினைப்பொருட்களும் சிறப்பு வாய்ந்தவை. தமிழகத்தின் மொத்த கயிறு உற்பத்தியில் 28.4 சதவிகிதமும் பாய் உற்பத்தியில் 61.5 சதவிகிதமும் இம்மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது.

ரப்பர்


ரப்பர் உற்பத்தி இம்மாவட்டத்தின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. மாவாட்டத்தின் மேற்குப்பகுதியில் கேரள இல்லையை ஒட்டிய பகுதிகளில் இவை அதிகமாக காணப்படுகின்றன. மேலும், நேந்திரம் பழம், செந்துளுவன், ரசகதளி, பாளயம்கொட்டான், துளுவம், மட்டி, உட்பட பல வகையான வாழைப்பழங்கள் இங்கு பயிரிடப்படுகின்றன. இவை மட்டுமல்லாமல், பலாப்பழம் (வரிக்கில மற்றும் கூளன்), மாம்பழம் (அல்போன்சா, பங்களோரா, நீலம், மற்றும் ஒட்டு) தேங்காய் ஆகியன இம்மாவட்டத்தின் விவசாய வளத்துக்கு பெருமை சேர்க்கின்றன. இவை தவிர ரோஜா, செவ்வந்தி, உட்பட பல மலர்களும் இங்கே பயிரிடப்படுகின்றன.

மீன் பிடிப்பு

கன்னியாகுமரி கடல் பகுதிகளில் 200 - க்கும் மேற்பட்ட இன மீன்கள் கிடைக்கின்றன.

கல்வி
கல்வியறிவு விகிதத்தில் (100%) குமரி மாவட்டம் தமிழகத்தில் முதலிடம் வகிக்கிறது. மேலும் கல்வித்தரத்திலும் முதலிடம் வகிக்கிறது.

குமரி மாவட்டத்திலுள்ள பள்ளிகள்

  1. மழலையர் பள்ளிகள் - 83
  2. தொடக்கப் பள்ளிகள் - 413
  3. நடுநிலைப் பள்ளிகள் - 147
  4. உயர் நிலைப் பள்ளிகள் - 121
  5. மேல் நிலைப் பள்ளிகள் - 120
  6. மொத்தம் 884

கல்லூரிகள்

  1. அங்கீகாரம் பெற்ற கல்லூரிகள் - 12
  2. சுயநிதி கல்லூரிகள் - 4
  3. Colleges for special education -8
  4. தொழில் கல்லூரிகள் - 20
  5. அரசு மருத்துவக்கல்லூரி - 1
  6. அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி - 1

சுற்றுலாத் தலங்கள்

  • கன்னியாகுமரி
  • நாகர்கோவில்
  • சுசீந்திரம்
  • வட்டக் கோட்டை
  • பத்மநாபபுரம் அரண்மனை
  • சிதறால் சமண நினைவு சின்னங்கள்
  • மாத்தூர் தொட்டிப் பாலம்
  • திருநந்திக்கரை குகைக் கோவில்
  • திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோவில்
  • உதயகிரிக் கோட்டை
  • உலக்கை அருவி
  • பேச்சிப்பாறை அணைக்கட்டு
  • பெருஞ்சாணி அணைக்கட்டு
  • திற்பரப்பு நீர்வீழ்ச்சி
  • முட்டம் கடற்கரை
  • தேங்காய்ப்பட்டணம் கடற்கரை
  • சங்குத்துறை கடற்கரை
  • ஆலஞ்சி கடற்கரை
  • சின்னவிளை கடற்கரை

கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கியமானவர்கள் சிலர்

  1. தமிழ் பெரும்புலவர் அதங்கோட்டாசான்-தொல்காப்பியம் எழுத்ததிகாரத்திற்கு உரைப்பாயிரம் எழுதிய இளம்பூரணம் என்னும் தமிழ்ப்புலவர் நான்கு மறைகளையும் முற்றும் உணர்ந்த "அதங்கோடு" என்கின்ற ஊரின் ஆசான் அதங்கோட்டாசான் தலைமையில் தொல்காப்பியம் அரங்கேற்றப்பட்டது என்று எழுதிஉள்ளார்
  2. புன்னைக்காடு கொச்சன் ஆசான் - திருவாங்கூர் மன்னர் ஆயில்லியம் திருநாள் ராமவர்மா (காலம் 1860-1880) விடமிருந்து வீரவாளும் முத்துக்குடையும் பரிசாக பெற்றவர்
  3. புலிப்புனம் இசக்கிமாடன் தண்டல்காரன் - பத்மநாபபுரத்திலிருந்து – கண்ணணூர் வரை நாயரை கொண்டு ஓலை சுமக்கவைத்தவர்
  4. பளுகல் இரத்தசாட்சி தேவசகாயம் நாடார் - 1854-ல்வேலைக்கு கூலி வேண்டும் என்று போராடியவர் (காலம் உத்திரம் திருநாள் மாகாராஜா 1847-1860)
  5. புலிப்புனம் குட்டிநாடார் - திருவாங்கூரில் முதல் பேருந்துதை இயக்கியவர் காலம் ஸ்ரீமூலம் திருநாள் ராமவர்மா (1885-1924)
  6. சாமிதோப்பு வைகுண்ட சுவாமிகள் -புதியதோர் சமயம் நிறுவியவர் காலம் (1808 -1851)
  7. களியக்காவிளை சத்தியநாதன் நாடார் - தென் திருவாங்கூரில் முதன் முதலில் கமேர்ஷியல் பயிற்சி பள்ளியை நிறுவியவர் காலம் (1923)
  8. பொன் பாக்கியநாதன் நாடார் - “சான்றோர் குல சந்திரிகை” என்ற தாய்மொழி தமிழில் குமரியில் முதல் சமுதாய நூல் எழுதியவர் காலம் (1892)
  9. நாகர்கோவில் எம். டானியேல் - தென் திருவாங்கூரில் முதல் பட்டதாரி காலம் (1889)
  10. பள்ளியாடி Dt. Yesudian Henry - திருவாங்கூரில் முதல் டாக்டர் (தெரசர்) காலம் (1847-1934)
  11. மேட்டுகடை S. பீருக்கண்ணு - இசுலாமியனாக மாறிய முதல் நாடார்
  12. இராமன்புதூர் D.D. பிறான்சிஸ் - குமரிக்கு ரயில் பாதை வேண்டும் என்று குரல் கொடுத்த முதல் மனிதர் மற்றும் கன்னியாகுமரி முதல் குளச்சல் வரை கடலோரம் சாலை அமைத்தவர் (காலம் 15-09-1873 to 17-10-1967)
  13. நாகர்கோவில் பாக்கியம் - திருவாங்கூரில் முதன் முதலில் வீட்டுக்கு ஓடு போட்டு கூரை வேய்ந்தவர்
  14. காரங்காடு சவரிமுத்து நாடார் - தனியார் துறையில் முதன் முதலில் ஓடு தயாரிக்கும் தொழிற்சாலை அமைத்தவர் காலம் 1893
  15. வெள்ளைய நாடார் - குமாரகோவில் முருகன் கோவிலில் முதன் முதல் ஆலைய பிரேவேசம் சென்றவர் காலம் (1854)
  16. குருந்தன்கோடு, நங்கள்விளை ஆன்டிநாடார் - முதன் முதலில் நங்கள்விளையில் முருகன் கோவில் கட்டியவர் காலம் 12-05-1870-08-01-1961
  17. அகஸ்தீஸ்வரம் ஜோசப் செல்லையா டானியேல் - மலையாள படஉலகில் “விகதகுமாரன்” என்ற முதல் படத்தை தயாரித்து வெளியிட்டவர்
  18. நாகர்கோவில் சுந்தரராஜ் டானில் - மலையாள படஉலகில் இரண்டாவது “மார்த்தாண்டவர்மா” என்ற ஊமை படத்தை தயாரித்தவர்
  19. ஆலஞ்சி திருப்பாப்பு நாடான் -கள்ளியங்காட்டு நீலி ( பெண் பேய்) யை வீட்டு வேலைக்கு அமர்த்திய மாந்திரீகன்
  20. கண்ணனுர், தச்சன்விளை அனந்தபத்மநாடார் ஆசான் - மன்னன் மார்தாண்டவர்மாவின் முதன்மை தனபதி காலம் (09-08-1697-14-09-1749)
  21. ஆற்றூர், n;சவரகோடு செல்லம்மை ஆசான் - யானைக்கு பிணி தீர்த்தவர்
  22. கள்ளியங்காடு பி.சி ஜோசப் - திருவாங்கூரில் முதல் செய்திதாள் தொடங்கியவர் "திருவாங்கூர் அபிமானி"
  23. பள்ளியாடி, முருங்கவிளை H. ஜெயபால் வக்கீல் - தென்இந்திய திருச்சபை ஐக்கியத்துக்கு எதிராக குரல் கொடுத்தவர் காலம் ( 20-08-1906 19-03-1967)
  24. அப்பட்டுவிளை மரியேந்திரன் ஆசாரியார் - மாட்டு வண்டிக்கு மரக்குடம் கண்டுபிடித்தவர்
  25. தென்தாமரைகுளம், கோட்டையடி ஏ. ஞானசிகாமணி – திருவாங்கூரில் முதல் முனிசிப் காலம் (13-2-1870 - 18-11-1941)
  26. மார்த்தாண்டம் ஜி.எஸ் மணி – குமரியின் முதல் பொது உடமை சிந்தனையாளர்
  27. பால். வி. டானியல் - குமரி மாவட்டம் பிரிவதற்கு வித்திட்ட முதல் நபா ;
  28. அகஸ்தீஸ்வரம் ஜாஷிவா கண்டிராக் - பேச்சுபாறை அணையைக் கட்டிய முதல் அரசாங்க காண்டிராக்டா

கன்னியாகுமரி மாவட்டம்
TN Districts Kanyakumari.png
கன்னியாகுமரி மாவட்டம்:அமைந்த இடம்
தலைநகரம்நாகர்கோவில்
மிகப்பெரிய நகரம்


இரண்டாவது பெரிய நகரம் 
நாகர்கோவில்

மார்த்தாண்டம் 
ஆட்சியர்மதுமதி 
சிறந்த கிராமம் மணவாளக்குறிச்சி 
ஆக்கப்பட்ட நாள்1956
பரப்பளவு1671.300 கி.மீ² (?வது)
மக்கள் தொகை
(2001)
அடர்த்தி
1,676,034 (?வது)
?/கி.மீ²
வட்டங்கள்4
ஊராட்சி ஒன்றியங்கள்9
நகராட்சிகள்4
பேரூராட்சிகள்56
ஊராட்சிகள்99
வருவாய் கோட்டங்கள்2

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்