Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
Latest News:
latest

Ads Place

மணவாளக்குறிச்சி பகுதியில் பைக் மோதி வாலிபர் பலி

மணவாளக்குறிச்சி அருகே உள்ள பரப்பற்று பகுதியை சேர்ந்தவர் முத்து நாடார் (வயது 60). வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த இவர் கடந்த சில மாதங்களுக்கு...

மணவாளக்குறிச்சி அருகே உள்ள பரப்பற்று பகுதியை சேர்ந்தவர் முத்து நாடார் (வயது 60). வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஊருக்கு திரும்பி வீட்டில் இருந்து வருகிறார்.
சம்பவத்தன்று இவர் தனது பைக்கில் கடைக்கு சென்று பொருட்கள் வாங்கி விட்டு வீட்டுக்கு திரும்பினார். பரப்பற்று பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் பெரியவிளையை சேர்ந்த ஜெனிட்டன் (வயது 33) என்பவர் ஓட்டிசென்ற பைக் முத்து நாடார் பைக் மீது மோதியது. 
இதில் ஜெனிட்டன் அருகில் இருந்த காம்பவுண்ட் சுவரில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். அவரை அப்பகுதியினர் மீட்டு திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். 
அங்கு சிகிச்சை பலனின்றி ஜெனிட்டன் நேற்று பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த முத்துநாடார் மணவாளக்குறிச்சியில் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 
இதுகுறித்து மணவாளக்குறிச்சி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்