Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Latest News:

latest

Ads Place

புதிய மோட்டார் வாகன சட்டம்: அபராத கட்டணத்தை குறைக்க தமிழக அரசு முடிவு

புதிய மோட்டார் வாகன சட்டத்தில் உள்ள அபராத கட்டணங்களை, சில பிரிவுகளில் குறைத்து அடுத்த 2 வாரங்களில் தமிழக போக்குவரத்து துறை அறிவிக்கவுள்ளது...

புதிய மோட்டார் வாகன சட்டத்தில் உள்ள அபராத கட்டணங்களை, சில பிரிவுகளில் குறைத்து அடுத்த 2 வாரங்களில் தமிழக போக்குவரத்து துறை அறிவிக்கவுள்ளது.
இந்தியாவில் ஆண்டுதோறும் சாலை விபத்துகளால் சராசரியாக ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் உயிரிழக்கின்றனர். எனவே, சாலை விபத்துகளை குறைப்பதோடு, ஓட்டுநர் உரிமம் வழங்குவதை முறைப்படுத்துதல் உட்பட பல்வேறு அம்சங்களுடன் மத்திய அரசு புதிய மோட்டார் வாகன சட்டத்தை சமீபத்தில் அமல்படுத்தியது.

இச்சட்டத்தின்படி, குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம், 2-வது முறை என்றால் ரூ.15 ஆயிரம் அபராதம் அல்லது 2 ஆண்டு சிறை, ஹெல்மெட் அணியாவிட்டால் ரூ.1,000 அபராதம், 2-வது முறையும் இதே தவறைச் செய்தால் 3 மாதங்களுக்கு ஓட்டுநர் உரிமம் சஸ்பெண்ட் உட்பட பல்வேறு விதி மீறல்களுக்கு அபராத தொகை 5 மடங்கு வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுபோல் அபராதத்தொகையை அதிகமாக வசூலிப்பதற்கு மக்களிடையே எதிர்ப்பு எழுந்துள்ளது.
இதையடுத்து, போக்குவரத்து விதிமீறல்களில் கடுமையான அபராதங்களை விதிப்பது குறித்து மாநில அரசுகளே முடிவெடுக்கலாம் என மத்திய அரசு அறிவித்தது. குஜராத் உள்ளிட்ட சில மாநிலங்களில் அபராத தொகை கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் அபராத கட்டணங்களை குறைக்கும் வகையில் தமிழக போக்குவரத்து துறை ஆய்வு மேற்கொண்டது. 

அதில், பல்வேறு பிரிவுகளில் கட்டணத்தை குறைத்து, தமிழக அரசின் ஒப்புதலுக்காக போக்குவரத்து துறை அனுப்பியுள்ளது. எனவே, அடுத்த 2 வாரங்களில் அபராத கட்டண குறைப்பு தொடர்பாக தமிழக அரசு அறிவிக்கும் என போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்