கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தக்கலை செய்கு பீர்முகமது சாகிப் ஒலியுல்லா ஆண்டு விழாவையொட...
கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தக்கலை செய்கு பீர்முகமது சாகிப் ஒலியுல்லா ஆண்டு விழாவையொட்டி, வருகிற 16-ம் தேதி (16-02-2022 - புதன்கிழமை) கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.
அன்றைய தினம் மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களும் செயல்படாது. இந்த விடுமுறை நாளுக்கு ஈடாக வருகிற 26-ம் தேதி (சனிக்கிழமை) வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விடுமுறை நாளான 16- ம் தேதி தலைமை கருவூலம் மற்றும் கிளை கருவூலகங்களில் அரசு சார்ந்த அவசர பணிகள் மேற்கொள்ள தேவையான பணியாளர்கள் கொண்டு செயல்படும்.
இவ்வாறு அறிக்கையில் கூறி உள்ளார்.
No comments