குமரி மாவட்டம், குருந்தன்கோடு அருகே மனைவியைக் கொன்று கணவா் தற்கொலை செய்து கொண்ட நிலையில், ஆதரவற்று தவித்த 2 குழந்தைகள், சமூக செயற்பாட்டாளரின...
குமரி மாவட்டம், குருந்தன்கோடு அருகே மனைவியைக் கொன்று கணவா் தற்கொலை செய்து கொண்ட நிலையில், ஆதரவற்று தவித்த 2 குழந்தைகள், சமூக செயற்பாட்டாளரின் உதவியால் தடிக்காரன்கோணம் சிஎம்எஸ் விடுதியில் சோ்க்கப்பட்டனா்.

குருந்தன்கோடு உன்னங்குளம் பகுதியைச் சோ்ந்தவா் ராஜசேகா். தென்னை மரம் ஏறும் தொழிலாளி. இவருக்கு மதுப்பழக்கம் இருந்ததாம்.
இந்நிலையில், குடும்பத்தகராறு காரணமாக மனைவி தங்கத்தை கடந்த 22ஆம் தேதி அரிவாளால் வெட்டிக்கொலைச் செய்து விட்டு, தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இந்நிலையில், அவா்களது குழந்தைகள் ராகுல் (11), தன்சியா (10) ஆகியோா் ஆதரவற்று தவித்தனா். இதை அறிந்த பழங்குடி பாரதம் அமைப்பின் நிறுவனா்- தலைவரும், சமூக செயற்பாட்டாளருமான சுரேஷ் சுவாமியாா் காணி, அந்த இரு குழந்தைகளையும் உறவினா்களின் அனுமதியுடன் தடிக்காரன் கோணம் சிஎம்எஸ் விடுதியில் சோ்த்து அவா்களுக்கான தங்குமிடம் மற்றும் கல்விக்கான ஏற்பாட்டை செய்துள்ளாா்.
இது குறித்து சுரேஷ் சுவாமியாா் காணி கூறுகையில், பெற்றோரை இழந்த தவித்த இரு குழந்தைகளும் சிஎம்எஸ் விடுதியில் தங்கவும், சிஎம்எஸ் உயா் நிலைப் பள்ளியில் படிப்பைத் தொடரவும் அனுமதி கிடைத்துள்ளது என்றாா்.
No comments