சீனாவின் வுகான் ஆய்வுக்கூடத்தில் மனிதா்களால் தான் கொரோனா வைரஸ் உற்பத்தி செய்யப்பட்டதாக பிரான்சின் நோபல் பரிசு பெற்ற நுண்கிருமி ஆய்வு அறிஞர...
சீனாவின் வுகான் ஆய்வுக்கூடத்தில் மனிதா்களால் தான் கொரோனா வைரஸ் உற்பத்தி செய்யப்பட்டதாக பிரான்சின் நோபல் பரிசு பெற்ற நுண்கிருமி ஆய்வு அறிஞர் லூக் மோன் தக்னேர் (Luc Montagnier) தெரிவித்துள்ளார்.
![]() |
| Luc Montagnier |
உலகம் முழுவதும் பரவி பல லட்சம் பேரை மருத்துவமனையில் கிடக்க செய்துள்ள இந்த கொடிய வைரஸ் குறித்த குழப்பமும், சந்தேகமும் பல்வேறு நாடுகளில் எழுந்துள்ளது. இந்நிலையில் எய்ட்ஸ் நோய்க்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் கொரோனா நுண்கிருமி மனிதர்களால் செயற்கையாக படைக்கப்பட்டு பரவியதாக பிரான்ஸ் அறிஞர் தெரிவித்துள்ளார்.
எய்ட்ஸ் என்ற நோயை கண்டுபிடித்ததற்காக 2008ம் ஆண்டு நோபல் பாிசு பெற்றவரான அவா் அந்நாட்டு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், வுகான் தேசிய பயோ சேப்டி ஆய்வுக்கூடத்தில் தற்செயலாக நடந்த விபத்தின் காரணமாகவே கொரோனா பரவியிருப்பதாகவும், இரண்டாயிரம் ஆண்டு ஆரம்பம் முதலே சீனா இத்தகைய கொரோனா வைரஸ்களை ஆராய்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதே குற்றச்சாட்டை தெரிவித்துள்ள அமெரிக்காவும் தீவிர விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளது. இந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

















No comments