Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
Latest News:

Ads Place

தமிழக முதல்-அமைச்சர் குறித்து அவதூறு வீடியோ வெளியிட்ட அரசு ஊழியர் கைது

குமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே சங்குருட்டி காலனி பகுதியை சேர்ந்தவர் சஜீவ்குமார் (வயது 45). இவர் 18 ஆண்டுகள் ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு ...

குமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே சங்குருட்டி காலனி பகுதியை சேர்ந்தவர் சஜீவ்குமார் (வயது 45). இவர் 18 ஆண்டுகள் ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற நிலையில் தற்போது தென்காசி மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறையில் டிரைவராக பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் பெரியார், திராவிட கழகம் குறித்து அவதூறு பரப்பும் வகையில் சமூக வலைத்தளத்தில் அவர் பேசியபடி வீடியோவை வெளியிட்டுள்ளார். மேலும் மதகலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாகவும் தெரிகிறது. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது.
இதுகுறித்து கீழ்குளம் பகுதியை சேர்ந்த தி.மு.க. வக்கீல் அணி அமைப்பாளர் ஜெப ஜான் கொல்லங்கோடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
பின்னர் தென்காசி மாவட்டம் விரைந்து சென்று சஜீவ்குமாரை பிடித்து கொல்லங்கோடு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். அதனைத்தொடர்ந்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்

மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பிப...

மூணாறு விபத்தில் உயிரிழந்த மாணவ-மாணவிகளின் பெற்றோருக்கு நிதி...

மண்டைக்காடு பகவதியம்மன் திருக்கோவில் மாசிக்கொடை விழா மார்ச் ...

மணவாளக்குறிச்சி, பெரியவிளை பகுதியில் 2 வள்ளங்களில் மோட்டார் ...

புதிய கூட்டணியின் பெயர் ‘இந்தியா’ - சேர்ந்து போராடுவோம்: எதி...

மாதவலாயத்தில் கடை திறப்பு விழா பணியின் போது மின்சாரம் பாய்ந்...

மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியப்பட்டணம் பகுதியை சேர்ந்த வால...

மணவாளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் போலீஸ...

மணவாளக்குறிச்சி பகுதியில் மின்சாரம் தாக்கி 10-ம் வகுப்பு மாண...

மணவாளக்குறிச்சி பேரூர் திமுக செயலாளராக ஐயப்பன் என்ற கண்ணன் ந...