வந்தே பாரத் திட்டத்தின் கீழ் வெளி நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க மேலும் 58 விமானங்கள் இயக்கப்படும் என மத்திய விமான போக்குவரத்துறை...
வந்தே பாரத் திட்டத்தின் கீழ் வெளி நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க மேலும் 58 விமானங்கள் இயக்கப்படும் என மத்திய விமான போக்குவரத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறியுள்ளார்.

உலகம் முழுவது கரோனா வைரஸ் பரவி வருவதால் அதனை தடுக்க உலக நாடுகள் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான போக்குவரத்தையும் ரத்து செய்துள்ளது. இதனால் மருத்துவம், சுற்றுலா, வேலை, கல்வி என பல்வேறு காரணங்களால் வெளிநாடுகளுக்கு சென்ற பலரும் தங்கள் சொந்த நாடுகளுக்கு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் சிக்கிய இந்தியர்களை மீட்க 'வந்தே பாரத்' என்ற திட்டம் மூலம் விமானங்கள் மற்றும் கப்பல்கள் மூலம் பிற நாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வந்து கொண்டிருக்கிறது. இதுவரை முதல்கட்ட வந்தே பாரத் திட்டம் முடிந்து தற்போது இரண்டாவது கட்ட மீட்பு நடந்து வருகிறது. மத்திய அரசின் வந்தே பாரத் மிஷன் திட்டத்தின் மூலம் 1.07 லட்சம் இந்தியர்கள் தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளனர். இரண்டாவது கட்ட மீட்பு ஜீன் 13ஆம் தேதி வரை இருக்கும்.
முதல்கட்ட வந்தே பாரத் மிஷன் திட்டம் மே 7ஆம் தேதி முதல் 1ஆம் தேதி வரை நடத்தப்பட்டது. இதில் 12 நாடுகளில் இருந்து 15 ஆயிரம் இந்தியர்கள் கப்பல், விமானம் மூலம் தாயகம் அழைத்துவரப்பட்டார்கள் என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் மத்திய விமான போக்குவரத்து துறை மந்திரி ஹர்தீப் சிங் பூரி," வந்தே பாரத் திட்டத்தின் கீழ் வளைகுடா நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க மேலும் 58 விமானங்கள் இயக்கப்படும். தற்போது 107 விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இனிமேல் 165 விமானங்கள் இயக்கப்படும். ஜூன் 30-ம் தேதி வரை இந்த விமானங்கள் இயக்கப்படும்." என தெரிவித்துள்ளார்.
















No comments