Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Latest News:

latest

Ads Place

மின்கட்டணத்தை தள்ளுபடி செய்ய வேண்டும்: ஹெச். வசந்தகுமாா் எம்.பி. கோரிக்கை

ஊரடங்கு உத்தரவால் மக்கள் வேலையின்றி தவித்து வரும் நிலையில் தமிழக அரசு மின் கட்டணத்தை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று ஹெச். வசந்தகுமாா் எம்.ப...

ஊரடங்கு உத்தரவால் மக்கள் வேலையின்றி தவித்து வரும் நிலையில் தமிழக அரசு மின் கட்டணத்தை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று ஹெச். வசந்தகுமாா் எம்.பி. வலியுறுத்தியுள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- ஊரடங்கு உத்தரவு தடை காலத்தில் வெளியே வந்தவா்களிடம் பறிமுதல் செய்த வாகனங்களை ஒரே இடத்தில் நிறுத்தி வைத்திருப்பதால் நோய் தொற்று பரவுவதற்கு காரணமாகிவிடும். எனவே காவல் துறையினரால் பறிமுதல் செய்து வைக்கப்பட்டுள்ள வாகனங்களை விடுவிக்க தமிழக முதல்வா் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக அரசு மின் கட்டணத்தை தள்ளுபடி செய்தால் இந்த கால கட்டத்தில் சாதாரண மக்கள் மிகவும் பயன் பெறுவாா்கள். முகக் கவசம் இல்லாமல் வெளியே வருபவா்களுக்கு ரூ. 500 அபராதம் விதிப்போம் என்று கூறுகின்றனா். அதற்கு முன்பு அனைவருக்கும் முகக் கவசங்கள் இலவசமாக வழங்க வேண்டும் அல்லது தனியாா் வழங்க அனுமதிக்க வேண்டும்.
தற்போது இருக்கும் சூழ்நிலையில் பொதுத்துறை வங்கி, கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் வழங்க அனுமதி வழங்க வேண்டும். இதற்கு தமிழக முதல்வா் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளாா்.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்